Monday 6 June 2011

வந்து விடு!

என்னவளே!
நீயாக சென்று-
கடலில் குளித்து விடு !

முடியாதென்றால் -
நீ குளித்த-
நீரை கொஞ்சம் -
கடலில் கொட்டி விடு!

அழகியே!
பலர் மகிழ்வதுண்டு-
கடலில் குளிப்பதால் !

கடலுக்கு மகிழ்ச்சியோ -
நீ வந்து -
குளிப்பதால்!

முத்தாக-
 ,மழை விழுந்திட -
வேண்டும்!
சிப்பியை கண்டு!

இந்த கடல் -
முத்தாக
மின்னுவதோ -
உன்னை கண்டு!

காலைக்குள்-
 வந்து விடு -
கண்டு விட -
கடலை !

இல்லைஎன்றால் -
உன்னை-
காண வந்து விடும் -
ஒரு ஆழி பேரலை!

No comments:

Post a Comment