Friday, 17 July 2015

இந்திய அரசியல்!

ஆட்சி கட்டில்தனை 
அலங்கரிக்க சந்தனங்கள் மறுத்ததால்!

சாக்கடைகள் அதிலேறிக்கொண்டு
சந்தனங்களையும் ஆள்கிறது!

            

Monday, 13 July 2015

முகமூடி..!!

காந்தியின் 
"கணக்கை"முடித்தவர்கள்!

காமராசரை
"கருக்கிட"த் துடித்தவர்கள்!

வருகிறார்கள் !

தன் கொலைகார 
கோரப்பற்களை மறைத்துக்கொண்டு!

"தேசப்பக்தன்" என்ற முகமூடியை அணிந்துக்கொண்டு!

      


Thursday, 9 July 2015

இரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்!


நம்மிருவர் சிறகிலும் இருவேறு ஓவியங்கள்!

அவ்வோவியத்தை நாமே கண்டிட முடியாததில்தான் இயற்கை வைத்திருக்கிறது ஓர் ரகசியம்!

என்மேலுள்ள ஓவிய அழகினை நீ சொல்ல!

உன்மேலுள்ள ஓவிய அற்புதத்தை நான் சொல்ல !

நாமிருவரும் 
சொல்ல ,சொல்ல!

சொல்ல,சொல்ல!

மெல்ல ,மெல்ல!

மெல்ல.மெல்ல!

நம் மனக்குடுவையில் நிரம்பிய வழிகிறது
ஓர் காதல்ரசம்!

மழைக்காலத்தில் ஏழைக்குடிசையில் ஒழுகிடும் மழைநீர்
 பாத்திரத்தை நிரப்பி வழிவதைப் போல்!

Monday, 6 July 2015

சிப்பியைப் போல.!? (1600வது பதிவு)

வான்தரும் 
ஓர் மழைத்துளிக்காக
வாய்ப் பிளந்து காத்திருக்கும்
சிப்பியைப் போலவா..!?

நீ தந்த
ஓர் முத்தத்தைப் பெறவா !?
மண்ணில் நான் பிறந்து வந்தேன் !?

       

Saturday, 4 July 2015

காதல் பந்து !

என் காதலை
கால்பந்தாய் எட்டி உதைத்தவளே!

கொஞ்சம் பொறு!

சுவற்றில் பட்ட 
அப்பந்து திரும்பி வருகிறது!

உன்மேல்
கவிதைப்பூக்களாய் கொட்டிட..!!

    

Friday, 3 July 2015

நெருங்கிடுவதற்கு முன்..!!

என்னிடம் 
நெருங்கி வருவதற்கு முன்
ஒதுங்கி வாழவும்
ஒத்திகைப் பார்த்துக்கொள்!

ஏனென்றால்
பிரியமானவர்களுடன் சேர்ந்து வாழும்
அதிர்ஷ்டம் இல்லாதவன்
நான்!

      

Thursday, 2 July 2015

என்னை மன்னித்து விடுங்கள் !

நான் வாசித்திடாத கவிதைகளே!

நான் ரசித்திடாத விடியற்காலைப் பொழுதுகளே !

நான் எழுதிடாத என்னுள் எழுந்த சிந்தனைகளே !

நான் நடந்திடாத கடற்கரைச்சாலையே!

நான் ஒதுங்கிடாத பனைமர நிழலே!

நான் கலந்திடாத நீதிக்கானப் போராட்டங்களே!

நான் பேசிடாத பால்யகால நட்புகளே!

நான் தெரிந்துக்கொள்ளாத என் மேல் நேசங்கொண்ட இதயங்களே!

உங்களைப் பிரிந்து ஓடும்
என்னை மன்னித்து விடுங்கள் !

மீசை அரும்புவதற்கு முன்னால் உழைக்க 
ஓடினேன்!

இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்!

அன்று
என் முன்னிருந்த கடமைகளுக்காக!

இன்று
என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் கடமைகளுக்காக !

உழைப்பதில் 
எனக்கு கலக்கமில்லை!
தயக்கமில்லை!

ஆனால்
உங்களைப் பிரிந்தேன் என எண்ணுகையில்தான்!

வார்த்தை வசப்படுவதற்கு முன்
பேனா எழுதுவதற்கு முன்!

என் கண்கள் எழுதி விடுகிறது!
கண்ணீரால் கவிதையொன்றை.....!!