Sunday, 30 June 2013

சூடுபட்டவன்...!

என்னை-
சுட்டு விட்டு-
மகிழ்கிறது-
சுடு எண்ணெய்!

எத்தனையோ-
சுடும்வார்தைகள்-
சுட்டிவிட்டது-
என்னை!

எண்ணெய்-
சுட்டது-
சொல்லாமலே-
தழும்பில்-
தெரியும்!

என் மனதின்-
தழும்புகள்-
மனிதர்களில்-
யார்-
அறியக்கூடும்!

பட்டிடும்-
எண்ணெய்-
அறியாது!

நான்-
அதை விட-
"சூடுபட்டவன்-"
என்பது!

பாவம்-
எண்ணெய்தான்!

அதற்கு-
மகிழ்வென்றால்-
சுடட்டும்-
என்னைதான் !




என்ன நாகரீக உலகமோ!?

பாதுகாக்க -
வேண்டிய-
இயற்கை வளத்தை-
அழிக்கிறான்!

இயற்கை சீற்றத்தில்-
சாகுறான்!

"மறைக்கிறதுக்கு"-
அணியும்-
ஆடையை-
"காட்டுறதுக்காகவே"-
உடுத்துறாங்க!

மானங்கெட்டு-
அலையுதுங்க!

அந்நிய பெண்ணை-
ஏறெடுத்து-
பார்க்காதேன்னு-
சொன்னாங்க!

இப்போ-
"பாதுகாப்பு"-
முக்கியமுங்குறாங்க!

என்ன-
நாகரீக-
உலகமோ!?

நாதாரி காலமோ!?





Saturday, 29 June 2013

ஓடினால்தான்.....!!

கல்லா!?
முள்ளா!?

பள்ளமா!?
உயரமா!?

அடுத்து -
வருவது!

யோசித்துக்கொண்டே-
நிற்காது!

நதியானது!

சரிவருமா!?
"சரிவாகுமா"!?

முடியுமா!?
"முடிவாகுமா"!?

பயணிக்காமல்-
இருப்பது!

மனித ஜென்மங்களில்-
பெரும்பான்மையானது!

ஓடினால்தான்-
நதி!

இலக்கை நோக்கி-
பயணித்தால்தான்-
லட்சியவாதி!





உரையாடல்...!

நீண்ட -
உரையாடலும்-
வீணானது-
புரியாத மனங்களிடம்!

நீடித்த -
மௌனமும்-
உரையாடி செல்லும்-
புரிந்தவர்களின் -
மனம்!

Friday, 28 June 2013

என்றென்றும்.....!!

அடுத்தது-
உங்களில்-
ஒருவர்-
என்றும்!

செய்யும்-
காரியங்கள்-
"எப்பேர்பட்டது"-
என்றும்!

கேலியாகவும்-
கேள்வியாகவும்-
கேட்கிறது-
மரண செய்திகள்-
என்றென்றும்!

இனியாவது-
நம் -
மனங்கள்-
திருந்தும்...!!?



Thursday, 27 June 2013

யாசகன்!

"அள்ளி"-
கொடுக்கவில்லை!

"கொட்டி -"
கொடுக்கவில்லை!

அப்படியெல்லாம்-
கொடுக்க -
நான்-
"அப்பா டாக்கர்"-
இல்ல!

யாசித்தாள்-
ஒரு தாய்!

யோசித்ததால்-
சிக்கியது-
"சின்னதாய்"!

கொடுத்து விட்டு-
சென்றேன்!

அவள்-
சொன்னதில்-
கண்கலங்கி -
சென்றேன்!

இறைவன்-
இன்னும் இன்னும்-
தருவான்-
மகனே!-என
சொன்னாள்!

அப்பாசவார்த்தையில்-
என்னை -
யாசகனாக்கினாள்-
அத்தாய்!

ஆணவம்!

"நான் "-எனும்
ஆணவம்!

தனக்கு தானே-
தோண்டி கொள்ளும்-
புதை குழியாகும்!