Friday 24 June 2016

சீனி மரைக்கார்..! (சிறுகதை) 3


        மாணிக்கத்தை அடித்த பிறகு,சீனி மரைக்காருக்கு பதக்கம் கிடைத்தது போல ,ஊருக்குள் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.அது இன்னும்,இன்னும் சாராயப் போதையைப் போல் மமதைப் போதையை கொடுத்தது.அதிலிருந்து உள்ளூரில் எங்கு அடிதடியென்றாலும்,அவர் பெயரும் அடிபடும்.வேலைக்குப் போக,போதையைப் போட,சண்டைப் போட,இப்படியாகப் போனது அவரது நாட்கள்.

      "ஏண்டி..இப்படியா...!?ஒம்மவன் அநியாயம் பண்ணுவான்....!?ஒரு கல்யாணம் காச்சிய முடிச்சி வச்சா...திருந்திருவான்ல....! என ஊரில் உள்ள பெண்கள் சொல்ல,ஏதாவது பொண்ணு கிடைக்குமான்னு ,அவர் அம்மா மரியம் தேடத் தொடங்கினாள்.அவள் தேடல் வீண் போகவில்லை .பக்கத்து ஊரில் பொண்ணும் கிடைத்தது.பெயர் பாத்திமா.அது அப்படியே மருவி "பாத்துமா"என மாறி விட்டது.

      கல்யாணம் நடந்தது.பாத்திமா வந்ததிலிருந்து ,சீனி மரைக்கார் குடிப்பதில்லை,யாரிடமும் வம்பு வளர்ப்பதில்லை."என்னமா மாறிட்டாரு தெரியுமா..!?"என்றெல்லாம் எழுதிட ஆசை தான்.

       ஆனால் அவர் மாறவில்லை,மாறுவதாகவும் இல்லை.....

   (தொடரும்...)

   

1 comment:

  1. ம்ம்ம். கல்யாணம் சிலரை மாற்றுவதில்லை....

    தொடர்கிறேன்.

    ReplyDelete