Friday, 9 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(35)

உலகம்-
விசித்திரமானது!

நல்லது-
சொன்னால்-
கெட்டது -
செய்வது!

அழகிய சொற்களுக்கு-
அசிங்க வார்த்தைகளை-
தருவது!

அகிம்சைகளுக்கு-
இம்சை தருவது!

நல்லது சொன்ன-
நாயகத்தால்-
ஒதுக்கபட்டார்கள்-
கிளையாளர்களும் !

நசுக்கியது-
பொல்லாத-
தீர்மானங்களும்!

"பகீழ்" என்பவனால் -
எழுதப்பட்டது!

காபதுல்லாவில்-
தொங்கவிடப்பட்டது!

கொடுக்கல்-
வாங்கல்-
நிறுத்தப்பட்டது!


நபிகளாரும்-
உறவுகளும்-
இலை தளை களை -
உண்ண வேண்டியதானது!

வேதனை!
வேதனை!

சொல்ல முடியாத-
சோதனை!

ஹிஷாம்-
சுஹைர் -
எதிர்த்தார்கள்!

தீர்மானத்தை -
கலைத்திட -
துணிந்தார்கள்!

ஆலோசித்தார்கள்!

ஓலையை -
கிழித்து-
எறிந்தார்கள்!

அபூதாலிபின்-
மரண காலமும் -
நெருங்கியது!

எதிரிகளுக்கு-
கலக்கத்தை-
தந்தது!

இவர் இறந்தபின்-
முஹம்மது(ஸல்)-அவர்களுக்கு
எதுவும் நடந்தால்-
நாம் அபூதாலிபுவிற்கு -
பயந்ததாக!

எண்ணினார்கள்-
அதற்குள்-
"பேசி முடிப்பது"-
நல்லதாக!


சொல்லிபார்த்தார்கள் !

நபிகளார்-
ஏகத்துவத்தை-
சொன்னார்கள்!

அபுதாலிப்-
மரணித்தார்கள்!

நபிகளாரை-
தொடர்ந்தது-
சோதனைகள்!

(தொடரும்...)

Thursday, 8 August 2013

இஸ்லாமும்- நபிகள் நாயகமும்! (34)


உத்பா என்பவன் -
முடிவுக்கு வந்தான்!

"முடிவுக்கு வந்திடும்"-என
முடிவு செய்தான்!

திட்டத்தினை -
நண்பர்களிடம்-
சொன்னான்!

அனுமதியும் -
பெற்றான்!

நபிகளாரிடம்!-
சென்றான்!

சொன்னான்!

பொன் பொருளின் மேல் -
ஆசையா!?

பெண்களின் மேல் -
ஆசையா!?

ஏதாவது-
"கெட்ட சக்திகளின் '-
சதியா!?

நம் முன்னோர்கள்-
"செய்தவற்றை"-
விமர்சிப்பது முறையா!?

பிரகசிப்பதை -
கைவிடுவீரா!?

புது மதத்தை -
விட்டு விடுகிறீரா!?

முடிந்ததா!?
நபிகளார்-
கேட்டார்கள்!

பிறகு-
திருமறையை-
ஓதினார்கள்!

ஓதி முடிந்ததும்-
நீங்கள்-
செல்லலாம்-
என்றார்கள்!

ஓதியதில்-
அர்த்தங்கள்-
பொதிந்திருந்தது!

உத்பாவின் -
உள்ளம் நடுக்கம் -
கண்டது!

ஒருவர் சொன்னதால்-
ஏற்கவில்லை!

எல்லா தலைவர்களும்-
சேர்ந்து சொன்னால்-
ஏற்கலாம்-என்று
மன நிலை!

எதிரி தலைவர்கள்-
நபிகளாரை-
"அழைத்து"-
 சொன்னார்கள்!

நபிகளார்-
முடியாது-என்பதை
உறுதி செய்தார்கள்!

சரி!
அடுத்த முயற்சி!

சமரச பேச்சி !

'நாங்கள்-
வணங்குகிறோம்-
உங்கள்-
கடவுளை!

நீங்கள்-
வணங்கனும்-
எங்கள்-
சிலைகளை!

இம்முடிவையும்-
சொன்னார்கள்-
எதிரிகள்!

அதற்கு-
பதிலானது-
பின்வரும் -
இறை வசனங்கள்!

'உங்கள்-
சிலைகளை-
 நான் வணங்குபவன் அல்ல-
நாங்கள் வணங்குபவனை -
நீங்கள்-
வணங்குபவர் அல்லர்!-
உங்கள் செயலுக்குள்ள -
கூலி உங்களுக்கு-
எங்கள் செயலுக்கு உரிய-
கூலி எங்களுக்கு!'(109;1-6)

இப்படியாக-
இறைமறை -
இறங்கியது!

எதிரிகளின்-
முகத்தில்-
அறைந்தது!

(தொடரும்....)




Monday, 5 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(33)

அபுஜஹ்ல் -எனும்
மூடன்!

நபிகளாரிடம்-
வம்பு வளர்க்கும்-
வம்பன்!

சுடுவார்த்தையால்-
சுட்டான்!

மௌனித்து நடந்த-
பெருமானார்(ஸல்)-ஐ
கல்லால் அடித்தான்!

ரத்தம் வழிந்ததை-
கண்டவன்!

சபையில் போய்-
அமர்ந்திட்டான்!

இதனையறிந்த-
நபியின் சிறிய தந்தை-
ஹம்ஜா அவர்கள்!

கோபத்தால்-
கனன்றார்கள்!

வில்லைவைத்து-
அபுஜஹ்லின் தலையில்-
ஒரே அடி!

நான் -
"இங்கே இருக்கேன்"-என
சொல்லாமல் சொல்லியது-
ரத்தம் வழிந்தபடி!

நானும்-
முஸ்லிமாகி விட்டேன்-
என்றார்-
கோபத்தில்!

ஆனால் -
முழுவதுமாக-
இஸ்லாத்தில் நுழைந்தார்-
புரிந்ததினால்!

மற்றொருவர்-
உமர்!

அவரின்-
உள்ளத்தில்-
தராசு ஒன்று-
ஊசலாடியது!

ஒரு விஷயத்தை-
புரிய நாடியது !

நம் முன்னோர்கள்-
"செய்தவைகள்"-
தவறா!?

இன்று -
முஸ்லிம்கள்-
சொல்வது-
தவறா!?

அப்படியென்றால்-
இவர்கள் ஏன்!?-
"இவ்வலிகளை"-
தாங்கனும்!?

ஆனாலும்-
"பழமையில்"-
திளைத்தது-
உமரின் மனம்!

உமர்-
முஹம்மது (ஸல்)-ஐ
கொல்ல வாளெடுத்தார் !

தெருவில்-
வந்தார்!

நு அய்ம்(ரழி)-
செய்தியை -
சொன்னார்!

உமர்-
கோபத்தின்-
எல்லைக்கே சென்றார்!

அச்செய்தி-
தங்கையும் -
மச்சினனும்-
மதம் மாறிவிட்டதாக!

அவர்களின்-
வீட்டுக்கு-
சென்றார்-
உமர் நேராக!

மச்சினனுக்கும்-
அடி!

தங்கச்சிக்கும்-
அடி!

ஆனால்-
அவ்விருவரும்-
சளைக்கவில்லை!

உமர்தான்-
கைசேதபட்டவரான-
நிலை!

திரு மறையை-
படித்து (ஓதி)-
பார்த்தார்!

வார்த்தை-
நயனங்களில்-
நெகிழ்ந்து போனார்!

அதன்-
பிறகாக-
இஸ்லாத்தினை-
ஏற்றார்!

சிலர் ஆபத்து வந்தால்-
எதிர்கொள்வார்கள்!

சிலர் ஆபத்தை-
தேடி எதிர்ப்பார்கள்!

உமர் (ரலி)-
அவர்கள்!

இரண்டாவது வகையை-
சார்ந்தவர்கள்!

இஸ்லாத்தை ஏற்றத்தை-
மறைத்திருந்தவர்கள்-
மத்தியில்!

எதிரிகளை-
தேடி சொன்னார்-
"சத்தியத்தை "ஏற்றதை-
அவர்களின்-
எதிரில்!

ஹம்ஜா (ரலி)-வும்
உமர் (ரலி-)வும்
இவ்வீரர்கள்-
இணைந்த பிறகு!

நடுக்கம்-
எதிர்களுக்கு-
முஸ்லிம்களை-
எதிர்பதற்கு!

இனி -
சண்டைக்கு-
வழியில்லை!

எதிரிகளுக்கு-
"பேச்சுவார்த்தையை"தவிர-
வழியில்லை!

பேச்சுவார்த்தை-
நடந்ததா!?

சுமூக முடிவுதான்-
ஏற்பட்டதா!?

(தொடரும்....)

// காந்தி சொன்னார் உமரோட ஆட்சி இந்தியாவில் மலரணும் .
என்றார். அந்த உமர் தான் . இத்தொடரில் வந்தவர்.
பிற்காலத்தில் மிக சிறந்த இஸ்லாமிய ஆட்சி புரிந்தவர்//







Sunday, 4 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (32)

"போனவர்களை"-
மீட்டு விட!

மீண்டும்-
சித்திரவதைக்கு-
உள்ளாக்கிட!

எதிரிகளால்-
அனுப்பபட்டார்கள்!
இருவர்!

அம்ரு-
அப்துல்லா -எனும்
பெயர்கள் கொண்ட-
இருவர்!

அன்பளிப்புகளுடன்-
மன்னர் நஜ்ஜாஷியை-
சந்தித்தார்கள்!

பெற்றோர்களை விட்டு-
சிலர் வந்து விட்டார்கள்-என
முறையிட்டார்கள்-
மன்னரிடம்!

"பேசிவைத்தவர்களும்"-
ஆமாம் போட்டனர்-
மன்னரிடம்!

அழைத்துவரபட்டார்கள்-
முஸ்லிம்கள்!

காரணம் சொல்ல-
ஆரம்பித்தார்கள்!

ஜாஅபர்(ரலி)-
அவர்கள்!

"நாங்கள் -
வரம்பு மீறி நடந்தோம்"

அண்டை வீட்டாரோடு-
சண்டையிட்டு மடிவோம்!

சிலைகளை வணங்கினோம்!

எங்களிருந்தே-
இறைவன் முஹம்மது (ஸல்)-எனும்
தூதரை அனுப்பினான்!-
அவர்களின் உபதேசத்தை -
கடைபிடித்தோம்!

இவர்களின்-
கொடுமைகளுக்கு உள்ளானோம்!

இவர்கள்-
தவறுகளை செய்ய -
சொல்கிறார்கள்!

அது முடியாது-என்றேதான்
இங்கே வந்தவர்கள்!

உண்மையை-
அறிந்த மன்னர்!

தங்கிட-
அனுமதித்தார்!

அனுப்பிட-
மறுத்தார்!

மறுநாளும்-
சூழ்ச்சி செய்தார்கள்!

அவர்களே-
தோற்றார்கள்!

நல்லவேளையாக-
இப்போதுள்ள-
கேடு கெட்ட-
சில ஊடகங்கள்-
அப்போதில்லை!

இருந்திருந்தால்-
மன்னரையும்-
திசை மாற்றிருப்பார்கள்-என்பது
பொய்யில்லை!

ஹபஷாவில் கிடைத்த -
தோல்வியால்!

மக்காவில்-
இன்னும்-
 கொடுமைகள் கூடியது-
அநியாயகாரர்களால்!

நபி முஹம்மது (ஸல்) மீதும்-
கொலை முயற்சி!

ஆனாலும்-
கொடுமைகள் எனும் இருளில்-
இரு  ஒளி கீற்று தெரிஞ்சிச்சி!

(தொடரும்....)







Saturday, 3 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(31)

ஆபத்து-
நிறைந்து விட்டது!

"அழைப்பு பணியை-"
நிறுத்த முடியாது!

என்ன செய்வது-
பெருமானார் (ஸல்)-
எண்ணமாக இருந்தது!

சஃபா மலையடிவாரத்தில்-
அர்கம் என்பவரின்-
வீடு இருந்தது!

அவ்வீடு-
மார்க்கத்தை ஏற்றவர்கள்-
ஒன்று கூடிட அமைந்தது!

குர் ஆன் ஓதுவதற்கும்!
சட்டங்களை விளங்குவதற்கும்!

ரசகசியமாகவே-
சந்தித்தார்கள்!

சத்தியத்தை ஏற்றதையும்-
மறைத்தே இருந்தார்கள்!

நபிகளார் மட்டும்-
வெளிப்படையாகவே-
வழிபட்டார்கள்!

நபிகளாருக்கு-
நெருக்கடியான-
சூழலிலும்!

எதிரிகளின்-
இடக்கு மடக்கான-
கேள்விகளுக்கும்!

வரும்-
சம்மட்டியான -
பதில்களும்-
ஆலோசனைகளும்!

இறை செய்தியின் (வஹ்யி)-
வாயிலாகவும்!

அதில் ஒன்று-
இடம்பெயர்தல் பற்றிய-
இறைசெய்தி வந்தது! (39;10)

பெருமானார் (ஸல்)-
அறிந்தார்கள்!

ஹபாஷா நாட்டு-
கிறிஸ்தவ மன்னர்-
நஜ்ஜாஷி -அவர்களை பற்றிய
செய்திகள்!

ஒரு-
 சிறு குழுவை-
ஹபஷாவிற்கு-
அனுப்பினார்கள்!

அதில்-
தன் மகள்-
ருகையா (ரலி)-வும்
மருமகன் உஸ்மான் (ரலி)-
அடங்குவார்கள்!

எதிரிகள்-
பிடித்திட முனைந்தார்கள்!

ஆனாலும்-
தப்பித்து -
சென்றுவிட்டார்கள்!

ஒருமுறை-
குறைஷியர்கள்-
கூடி இருந்தார்கள்!

திடீரென-
முஹம்மது (ஸல்)-
அங்கு வந்தார்கள்!

குர் ஆன் வசனங்களை-
ஓத ஆரம்பித்தார்கள்!

அதன் இனிமையையும்-
உண்மையையும் -
கேட்டவர்கள்-
தன்னை மறந்தார்கள் !

அப்போது-
அவர்களையே-
மறந்து -
இறைவனுக்கும்-
சிரம்பணிந்தார்கள் !

இதனை அறிந்த-
மற்றவர்கள்-
இவர்களை-
தூற்றினார்கள்!

இவர்களோ-
சிலைகளை-
போற்றியதாக-
புரட்டினார்கள்!

இடம்பெயர்தவர்களோ-
எதிரிகள்-
முஸ்லிமாகி விட்டார்கள்!-என
கேள்வி பட்டு!

வந்தார்கள்-
இருந்த-
 இடத்தை விட்டு!

சிலர் -
திரும்பி விட்டார்கள்-
"உண்மையை"-
அறிந்து  விட்டு!

மற்ற சிலர்களோ-
சித்திரவதைபட்டார்கள்-
மக்காவில் மாட்டிகொண்டு!

மீண்டும்-
ஒரு பெரிய குழு-
ஹபஷாவிற்கு-
பயணம்!

பிடிக்க முனைந்து-
தோல்வியால்-
எதிரிகளோ-
கடும்கோபம்!

ஊரை விட்டு-
போனவர்களையாவது-
விட்டார்களா!?

நாசக்காரர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

(தொடரும்...)







Friday, 2 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(30)

எதிர்தரப்பினர்கள்-
ஒன்று சேர்ந்தார்கள்!

அபூதாலிப்பை-
சந்திக்க வந்தார்கள் !

வந்ததின்-
நோக்கத்தை-
சொன்னார்கள்!

தம்பி மகனின்(முஹம்மது(ஸல்))-
பிரசாரத்தை-
நிறுத்திடனும் -என
சொன்னார்கள்!

அபூதாலிப்-
சமாதானம் செய்து-
அனுப்பினார்கள்!

முஹம்மது(ஸல்)-
பிரச்சாரம்-
எப்போதும் போலவே!

மீண்டும்-
அபூதாலிபுவை-
சந்தித்தார்கள்-
கோபம் தலைக்கு ஏறவே !

வார்த்தையில்-
கடுமை -
இருந்தது!

"கொடூரம்"-
நடக்கலாம்-எனவும்
உணர்த்தியது!

அபூதாலிபு-
சொல்லிபார்த்தார்கள்-
நபிகள் நாயகத்திடம்!

"வலது கையில் சூரியனையும்-
இடது கையில் சந்திரனையும்-
வைத்தாலும்!
மார்க்கத்தை மேலோங்க செய்யும் வரை!
அல்லது-
நான் அழியும் வரை-
அழைப்பு  பணியை-
விட முடியாது -என்றார்கள்-
பெரிய தந்தையிடம்!

தீர்கமாக-
சொன்னார்கள்!

தீர்க்கதரிசி அவர்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்களும்
விடுவதாக இல்லை!

அபூதாலிபு-
தம்பி மகனை-
விட்டு கொடுப்பதாக இல்லை!

கயவர்களோ-
"காரியத்தில்"-
இறங்கி விட்டார்கள்!

சொல்ல முடியாத-
துன்பங்களை-
இழைத்தார்கள்!

கட்டி கொடுத்த-
மகள்களை-
விவகாரத்து செய்தார்கள்!

நடக்கும் பாதையில்-
முற்களை வைத்தார்கள்!

எச்சிலையும்-
உமிழ்ந்தார்கள்!

வீட்டினுள்-
அசுத்தத்தை-
எறிவார்கள்!

தொழுகையில் "சஜ்தா"வின்போது-
ஒட்டககுடலை அவர்களின்-
தோள்மேல் போட்டார்கள்!

எழமுடியாமல்-
மூச்சி திணறினார்கள்!

எதேச்சையாக வந்த-
மகளார் பாத்திமா (ரலி)-
அக்குடலை நீக்கினார்கள்!

மல்லாக்க படுத்துக்கொண்டு-
மேல் நோக்கி எச்சில் துப்பும்-
முட்டாள்கள்-
இவர்கள்!

நபிகளாரை -
அசிங்கபடுதுவதாக எண்ணி-
அவர்களே அசிங்கபட்டாதாகவே உள்ளது-
வரலாறுகள்!

(தொடரும்....)

// சஜ்தா என்பது தொழுகையின்போது தலையை கீழே வைத்து வணங்குவதாகும்//




Thursday, 1 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(29)

தொல்லைகள்-
தொடர்ந்தது!

எல்லையில்லாமல்-
வளர்ந்தது!

இஸ்லாத்தினை-
செல்வந்தர்கள் ஏற்றால்-
செல்வங்கள்-
நிர்மூலமாக்கப்படும்!

"இல்லாதவர்கள்-"என்றால்-
உடலும் உயிரும்-
உருக்குலைக்கபடும்!

மேலும்-
பேரீத்தம் கீற்றுகளால்-
சுருட்டபடுவார்கள்!

தீயிலிட்டு-
மூச்சு திணறடிக்கபடுவார்கள்!

பெத்த மகனைகூட-
தெருவில் தள்ளிய-
தாயும் உண்டு!

அதற்காக-
சத்தியத்தை விட்டு-
விலகாத-
மகனும் உண்டு!

அடிமையான-
பிலால் (ரலி)-
அவர்கள்!

இஸ்லாத்தை-
ஏற்றிருந்தார்கள்!

கழுத்தில்-
கயிறைகட்டி-
தர தரவென-
இழுக்கபட்டார்கள்!

ஆடைகளை-
விளக்கி விட்டு-
பாலையில்-
கிடத்தபட்டார்கள்!

நெஞ்சின் மீது-
பாறைகள்-
வைக்கபட்டார்கள்!

கல்லுக்குள்ளாவது-
ஈரம் இருந்திருக்கும்!

கல்லான -
உள்ளங்களிலோ-
கொடுமைதான்-
நிறைந்திருக்கும்!

அல்லல்படும்-
பிலால்( ரலி)யை-
அபூபக்ர் (ரலி)-
விலைக்கு வாங்கினார்கள்!

சுதந்திரமாக-
விட்டார்கள்!

மற்றொருவர்-
அப்பாஸ் இப்னு அரப்-
அவர்கள்!

காயபடுத்தியது-
பழுக்க காய்ச்சிய -
கம்பிகள்!

இன்னொன்று-
கடத்தப்பட்டது-
ஒரு குடும்பம்!

கொடுமைக்குள்ளானது-
அக்குடும்பம்!

கணவர்-
கொடுமை தாளாமல்-
மரணம்!

குடும்பத்தாயோ-
ஈட்டியால்-
பெண்ணுறுப்பில்-
குத்தபட்டாள்!

பாலைவனத்தில்-
சடலமானாள்!

அப்பெண்மணிதான் -
சுமையா (ரலி)-
அவர்கள்!

அந்த தாய்தான்-
இஸ்லாத்திற்காக-
முதல் உயிர் நீத்த-
புண்ணியவதியாவார்கள்!

இக்கொடூரங்கள்-
நடந்ததை-
சொல்லுவோம்-
காட்டுமிராண்டிகள் காலமாக !?

குவண்டானாமோவும்-
குஜராத் கொடூரமும்-
"நடக்கும்-"
"நடதியவைகளால்"-
சொல்ல முடியுமா!?-
இன்றைக்கு-
அறிவியல் காலமாக!?

கொடுமைகள்-
நடந்த-
நடக்கும்-
காலத்தில்தான்-
வேறுபாடு!

அம்மக்கள்-
ஏற்ற கொள்கையும்!
அவர்கள் மேல் கொண்ட-
பகையில் இல்லை -
வேறுபாடு!

புழுதிகாற்றுக்கு-
சூரியனை-
மறைப்பதாக-
எண்ணம்!

சூரியனை-
தொடக்கூட முடியாது -என்பதே
திண்ணம்!

(தொடரும்....)