Monday 5 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(33)

அபுஜஹ்ல் -எனும்
மூடன்!

நபிகளாரிடம்-
வம்பு வளர்க்கும்-
வம்பன்!

சுடுவார்த்தையால்-
சுட்டான்!

மௌனித்து நடந்த-
பெருமானார்(ஸல்)-ஐ
கல்லால் அடித்தான்!

ரத்தம் வழிந்ததை-
கண்டவன்!

சபையில் போய்-
அமர்ந்திட்டான்!

இதனையறிந்த-
நபியின் சிறிய தந்தை-
ஹம்ஜா அவர்கள்!

கோபத்தால்-
கனன்றார்கள்!

வில்லைவைத்து-
அபுஜஹ்லின் தலையில்-
ஒரே அடி!

நான் -
"இங்கே இருக்கேன்"-என
சொல்லாமல் சொல்லியது-
ரத்தம் வழிந்தபடி!

நானும்-
முஸ்லிமாகி விட்டேன்-
என்றார்-
கோபத்தில்!

ஆனால் -
முழுவதுமாக-
இஸ்லாத்தில் நுழைந்தார்-
புரிந்ததினால்!

மற்றொருவர்-
உமர்!

அவரின்-
உள்ளத்தில்-
தராசு ஒன்று-
ஊசலாடியது!

ஒரு விஷயத்தை-
புரிய நாடியது !

நம் முன்னோர்கள்-
"செய்தவைகள்"-
தவறா!?

இன்று -
முஸ்லிம்கள்-
சொல்வது-
தவறா!?

அப்படியென்றால்-
இவர்கள் ஏன்!?-
"இவ்வலிகளை"-
தாங்கனும்!?

ஆனாலும்-
"பழமையில்"-
திளைத்தது-
உமரின் மனம்!

உமர்-
முஹம்மது (ஸல்)-ஐ
கொல்ல வாளெடுத்தார் !

தெருவில்-
வந்தார்!

நு அய்ம்(ரழி)-
செய்தியை -
சொன்னார்!

உமர்-
கோபத்தின்-
எல்லைக்கே சென்றார்!

அச்செய்தி-
தங்கையும் -
மச்சினனும்-
மதம் மாறிவிட்டதாக!

அவர்களின்-
வீட்டுக்கு-
சென்றார்-
உமர் நேராக!

மச்சினனுக்கும்-
அடி!

தங்கச்சிக்கும்-
அடி!

ஆனால்-
அவ்விருவரும்-
சளைக்கவில்லை!

உமர்தான்-
கைசேதபட்டவரான-
நிலை!

திரு மறையை-
படித்து (ஓதி)-
பார்த்தார்!

வார்த்தை-
நயனங்களில்-
நெகிழ்ந்து போனார்!

அதன்-
பிறகாக-
இஸ்லாத்தினை-
ஏற்றார்!

சிலர் ஆபத்து வந்தால்-
எதிர்கொள்வார்கள்!

சிலர் ஆபத்தை-
தேடி எதிர்ப்பார்கள்!

உமர் (ரலி)-
அவர்கள்!

இரண்டாவது வகையை-
சார்ந்தவர்கள்!

இஸ்லாத்தை ஏற்றத்தை-
மறைத்திருந்தவர்கள்-
மத்தியில்!

எதிரிகளை-
தேடி சொன்னார்-
"சத்தியத்தை "ஏற்றதை-
அவர்களின்-
எதிரில்!

ஹம்ஜா (ரலி)-வும்
உமர் (ரலி-)வும்
இவ்வீரர்கள்-
இணைந்த பிறகு!

நடுக்கம்-
எதிர்களுக்கு-
முஸ்லிம்களை-
எதிர்பதற்கு!

இனி -
சண்டைக்கு-
வழியில்லை!

எதிரிகளுக்கு-
"பேச்சுவார்த்தையை"தவிர-
வழியில்லை!

பேச்சுவார்த்தை-
நடந்ததா!?

சுமூக முடிவுதான்-
ஏற்பட்டதா!?

(தொடரும்....)

// காந்தி சொன்னார் உமரோட ஆட்சி இந்தியாவில் மலரணும் .
என்றார். அந்த உமர் தான் . இத்தொடரில் வந்தவர்.
பிற்காலத்தில் மிக சிறந்த இஸ்லாமிய ஆட்சி புரிந்தவர்//







2 comments:

  1. வரலாறு வியக்க வைக்கிறது! தொடர்கிறேன்!

    ReplyDelete
  2. நல்ல முயற்சி
    ஆரம்பத்திலிருந்து படிக்க விடுபட்டுப்போனதற்காக
    வருந்துகிறேன்
    இந்தவாரம் முழுவதும் படித்துவிடுவேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete