Wednesday 28 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(56)

நபியின்-
"குறித்த நேரம்"-
நெருங்கியது!

உடல் உபாதைகளால்-
உடல் வருத்தியது!

நாட்கள்-
நெருங்க-
நெருங்க!

தலைவலியும்-
உடல் சூடும்-
கூடி கொண்டே இருக்க!

நபிகளார்-
கிணற்றுகளிருந்து-
தண்ணீர் எடுத்துவர-
சொன்னார்கள்!

ஒரு பெரிய பாத்திரத்தில்-
உட்கார வைக்கப்பட்டார்கள்!

தண்ணீர் -
ஊற்றப்பட்டபோது!

உடல் சூடு-
குறைந்தபோது!

உடைமாற்றினார்கள்!

மக்கள் முன்-
உரையாற்றினார்கள்!

பழிதீர்க்கலாம்!

உங்களில் யாரையேனும்-
நான்-
முதுகில் அடித்திருந்தால்!

வந்து-
அடித்துகொள்ளலாம்!

திட்டி இருந்தால்-
திட்டிகொள்ளலாம்!

அப்போது-
ஒருவர்!

எனக்கு -
மூன்று திர்ஹம் தரனும்-
என்றார்!

நபிகளார்-
கொடுத்திட-
ஒருவரிடம்-
சொன்னார்!

மரணிப்பதற்கு-
ஒரு நாளுக்கு-
முன்னால்!

அந்நாளும்-
கழிந்தது-
தர்மத்தால்!

இருந்த-
அடிமைகளை-
உரிமை விட்டார்கள்!

இருந்த-
ஆறு அல்லது ஏழு தங்க காசுகளை-
தர்மம் செய்தார்கள்!

நபிகளாரின்-
வீட்டு விளக்கு-
எண்ணெய்க்காக-
காத்திருந்தது!

என்னை வாங்க-
அண்டை வீட்டிற்கு-
பாத்திரம் போனது!

நபியின்-
கவாச ஆடைகள் கூட!

அடமானத்தில் -
இருந்தது-
அப்போது கூட!

இதுதான்-
இஸ்லாமிய சக்ரவர்த்தியின்-
வாழ்க்கை!

படித்தாலும்-
எழுதினாலும்-
கலங்கி நிறைக்கிறது-
கண்ணீர்-
உள்ளக்கிடங்கை!

(தொடரும்....)





2 comments: