Sunday 25 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (50)

படை பட்டாளத்துடன்-
இஸ்லாமிய படை-
மக்காவிற்கு-
சென்றது!

அசத்தியம்-
அழிவதற்கு-
சத்தியம்-
சாதிக்க-
செல்கிறது!

அபு சுப்யான் (ரலி)-என்பவர்
இஸ்லாத்தை ஏற்ற-
மக்காவாசியாவார்!

இஸ்லாமிய படையை பற்றி-
மக்காவாசிகளுக்கு-
எச்சரிக்கை  விடுத்தார்!

படைகளின்-
 தாக்குதலிருந்து-
தப்பிக்க -
ஆலோசனை சொன்னார்!

காபதுல்லாவிற்குள்-
சென்று விடுங்கள்-
என்றார்!

அல்லது-
என் வீட்டிற்குள்-
வந்து விடுங்கள்!

அல்லது-
உங்கள் வீட்டிற்குள்-
தாழிட்டுகொள்ளுங்கள்!

மக்கள்-
பாதுகாப்பு பெற்றார்கள்!

சிலர்-
சண்டையிட்டார்கள்!

சண்டையிட்டவர்கள்-
சமாதியானார்கள்!

மக்கா-
முஸ்லிம்கள்-
வசம்!

திரும்பியது-
உலகை திரும்பவைத்தது-
புதிய சகாப்தம்!

புனித ஆலயத்திற்கு-
நபிகளார்-
வருகிறார்கள்!

சிலைகளை -
அப்புறபடுத்துகிரார்கள்!

தொழுகையின் நேரம்-
வந்தது!

பிலால் (ரலி)-அவர்களின்
குரலின் வாயிலாக-
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)-
கேட்டது !

முன்னே-
நபிகளாரை-
விரட்டியடித்த-
மக்கத்து மக்கள்!

நபிகளாரின்-
பெருந்தன்மையின் முன்னால்-
பாதுகாப்பு பெற்றார்கள்!

கொடூரர்கள்-
ஒன்பது பேர்களை-
தவிர்த்து!

மற்ற அனைவரையும்-
விட்டார்கள்-
நபிகளார்-
மன்னித்து!

பிரிந்தபோன-
மக்காவின் மண்!

பிரியமான-
மண்!

(தொடரும்.....)






1 comment:

  1. அல்லது // என் வீட்டிற்குள்-
    வந்து விடுங்கள்! // உங்கள் வீட்டிற்குள்-
    தாழிட்டுகொள்ளுங்கள்!

    தொடர்கிறேன்...

    ReplyDelete