Wednesday 28 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(55)

சத்தியத்தை -
எடுத்துரைத்த-
நபிகள் நாயகம்!

வாழ்நாள்-
குறைவதை-
சொன்னது-
உள்மனம்!

நபிகள் நாயகம்-
ஒட்டுமொத்த-
முஸ்லிம்களுடன்-
ஹஜ் யாத்திரை-
சென்றார்கள்!

அதில்-
ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் -
முஸ்லிம்கள்!

ஹஜ்ஜை முடித்த-
நாயகம் அவர்கள்!

முஸ்லிம்களின் முன்-
உரையாற்ற -
ஆரம்பித்தார்கள்!

அதுவே-
இன்றும் -
என்றும் சொல்லப்படும்-
நபிகளாரின் இறுதி பேருரை!

மறக்க முடியாத-
அறிவுரை!

ஓ!
மக்களே!
துல்ஹஜ் மாதத்தையும்-
புனித காபதுள்ளவையும்-
எப்படியெல்லாம்-
புனிதமாக-
கருதுகிறீர்கள்!?

அதுபோலவே-
உங்களில் ஒருவர்-
மற்றவரின்-
உயிரையும்-
மானத்தையும்-
கருதுங்கள்!

தவறு செய்தவருக்கே-
தண்டனை!

தந்தையின் தவறுக்கு-
மகனுக்கோ-
மகனின் தவறுக்கு-
தந்தைக்கோ-
கொடுக்கபடாது-
தண்டனை!

பெண்களை குறித்து-
அல்லாஹ்வை-
அஞ்சிகொள்ளுங்கள்!

பெண்கள்-
அல்லாஹ்வின் அமானிதமாக-
பெற்றுள்ளீர்கள்!

நீங்கள்-
இறை வேதத்தை-
பற்றி பிடியுங்கள்!

அதனால் -
வழிதவறமாட்டீர்கள்!

இறையச்சத்தை தவிர-
வேறெந்த -
சிறப்பும் இல்லை!

மேன்மையும் இல்லை!

ஓர் அரபி-
அரபியல்லாதவரை விட!

ஓர் அரபியல்லாதவர்-
ஓர் அரபியை விட!

ஓர் வெள்ளையர்-
கருப்பரை விட!

ஓர் கறுப்பர்-
வெள்ளையரை விட!

உரையாற்றிவிட்டு-
மக்களிடம்-
நபிகளார்-
கேட்டார்கள்!

மறுமையில் -
என்னைப்பற்றி கேட்டால் -
என்ன!?-
சொல்வீர்கள்!

நீங்கள்-
எடுத்துரைத்தீர்கள்!
நிறைவேற்றுநீர்கள்!
நன்மையே நாடுநீர்கள்!-
என்றார்கள்!
மக்கள்!

நபி-
தன் ஆட்காட்டி விரலை-
நீட்டினார்கள்-
வானை நோக்கி!

பின்-
மக்களை நோக்கி!

யா!அல்லாஹ்!
இதற்கு-
நீயே சாட்சி!-
என்றார்கள்!

இங்கு வந்தவர்கள்-
வராதவர்களிடம்-
சொல்லுங்கள்!-
என்றார்கள்-
நபிகள்!

(தொடரும்....)





No comments:

Post a Comment