Tuesday 20 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(43)

சொந்த மண்ணிலும் -
வாழ விடவில்லை !

பிற மண்ணிலும் -
வாழ விடுவதாகவில்லை!

கேடுகெட்ட -
எதிராளிகளின்-
மன நிலை!

முஸ்லிம்களை-
நசுக்குவதிலேயே-
நிலைதிருந்தது-
எண்ண அலை!

மதீனாவில் இருந்த-
நயவஞ்சகன் அப்துல்லா இப்னு உபையுடன்-
கலந்து -
கலகமூட்டினார்கள்!

நபிகளார்-
சமயோசிதத்தால்-
போர் மேகத்தை-
கலைத்தார்கள்!

மதீனாவிற்கு-
வர இருந்த-
முஸ்லிம்களை-
மக்காவில்-
துன்புறுத்தினார்கள்!

முஸ்லிம்களின் -
சொத்துகளையும்-
கையகபடுத்தினார்கள்!

மதீனத்து முஸ்லிம்களையும்-
அழித்திட நினைத்தார்கள்!

இதனை-
முஸ்லிம்களும்-
அறிந்தார்கள்!

தற்காத்துக்கொள்ள-
போர் செய்ய-
அனுமதித்தான்-
இறைவனும்!

தன்னையும்-
தன் சமூகத்தையும்-
எதிரிகளிடம் இருந்து-
பாதுகாத்திட -
துணிந்தார்கள் -
நபிகளாரும் -
தோழர்களும்!

மதீனத்து முஸ்லிம்கள்-
ரோந்து வந்தார்கள்!

அவ்வழியில்தான்-
வியாபாரத்திற்கு-
செல்வார்கள்-
மக்கா வியாபாரிகள்!

(தொடரும்....)




1 comment: