Monday 12 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (38)

மதீனத்து-
மக்களுடன்-
மக்காவிலுள்ள-
அகபாவில்-
நபிகளார் நடத்தினார்கள்-
ஒப்பந்தம்!

அவ்வொப்பந்தம்-
மிக பெரும்-
திருப்பம்!

மதீனாவில்-
"அழைப்பு பணி"-
மேற்கொள்ள!

முஸ் அப் (ரலி)-
பொறுப்பை சுமந்து-
சென்றார்-
நபிகளார் சொல்ல!

முஸ் அப்(ரலி)-
சத்தியத்தின் பக்கம்-
மக்களை அழைத்தார்கள்!

மக்களும்-
செவி சாய்த்தார்கள்!

குத்த வந்த-
ஈட்டியும் !

நடந்தது-
ஈமானால் (இறைநம்பிக்கை)-
கூர் மழுங்கியதும் !

சத்தியத்தை-
ஏற்றதும்!

மதீனாவில்-
வெற்றி என்றதும்-
குளிர்ந்து-
உள்ளம்!

அடுத்த ஆண்டு-
மற்றுமொரு-
கூட்டத்தாருடன்-
ஒப்பந்தம்!

வரும்-
ஆபத்தை உணர்த்தியது-
அவ்வொப்பந்தம்!

மதீனாவில்-
நபிகளாரை-
தங்கிட வைத்தால்!

அந்நகரம் -
சூழப்படும்-
ஆபத்தால்!

தங்கள் உயிர்களும்-
உறவுகளின் உயிர்களும்-
உருவபடலாம்!

செல்வங்கள்-
சீரழிக்கபடலாம்!

இப்படியெல்லாம்-
உங்களுக்கு-
ஏற்படலாம்!

முடியாதென்றால்-
இப்பொழுதே-
சொல்லிவிடலாம்!

மதீனா மக்களோ-
எதற்கும் தயாரானவர்கள்!

இதற்காகவெல்லாம்-
அம்மக்கள் -
நபிகளாரை-
இழக்க நினைக்காதவர்கள்!

பை ஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்)-
நடந்தது!

மனங்களோ-
ஒன்றிணைந்தது!

மக்கா-
எதிரிகள்-
இதனை -
அறிந்தார்கள்!

ஆனாலும்-
ஏமாந்தார்கள்!

நபிகளார்-
சத்திய பேரொளியை-
மக்காவில் ஏற்றினார்கள்!

அங்கு-
நட்சத்திரங்களையே-
உருவாக்கியது!

மதீனாவிலோ-
முழு பௌர்ணமியே-
உருவானது!

(தொடரும்...)






2 comments:

  1. அருமை சகோ கவிஅழகு!! தொடர்கின்றேன் .

    ReplyDelete