Sunday 18 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகம்!(41)

மதீனாவின் நிலையையும்-
மக்காவின் நிலையையும்-
ஒப்பிட்டால்!

மிகைந்து காணப்படும்-
வேறுபாட்டால்!

மதீனாவில்-
"வந்தவர்களையும்"-
"இருந்தவர்களையும்" சேர்த்தால்-
முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள்!

கட்டமைக்க இருந்ததோ-
பெரும்பான்மைவைகள் !

அரசியல் ரீதியாக!
பாதுகாப்பு ரீதியாக!

ஆகுமானவைகள்!(ஹலால்)
தடுக்கப்பட்டவைகள் !(ஹராம்)

புது ஒரு சமுதாயம்!
கட்டமைக்கவேண்டியது-
நபிகளாரின் கடமையாகும்!

மதீனத்தில்-
அப்துல்லாஹ் இப்னு உபை-
என்பவன்!

தலைமைபதவி கனவில்-
உலா வந்தவன்!

நபிகளார் வந்தபின்-
நிலை மாறியது!

அப்துல்லா இப்னு உபை -
உள்ளம்  நயவஞ்சகத்தால்-
நிறைந்தது!

பதிப்படைந்தார்கள்-
யூதர்கள்!

வட்டியாலும்-
விரோதத்தை வளர்த்தும்-
வயிறு வளர்த்தார்கள்!

இஸ்லாம் -
"தடுத்திடும்"என்பதால்-
நடுங்கினார்கள்!

ஒருபக்கம்-
அப்துல்லா இப்னு உபையுடன்-
சில வாலிபர்களால்-
குழி பறிப்புகள்!

மறுபுறம்-
யூதர்களின்-
வஞ்சக நெஞ்சங்கள்!

எதிர்புறத்திலோ-
மக்கத்து எதிரிகள்-
பழிவாங்க துடிப்புகள்!

இத்தனைக்கும்-
மத்தியில்-
இஸ்லாத்தின் வளர்ச்சிகள்...!?

(தொடரும்....)





1 comment:

  1. தொடருங்கள்... பல செய்திகளை தங்கள் தொடர் மூலம் இஸ்லாம் பற்றி அறிந்துகொள்கிறேன்....
    மிக்க நன்றி...

    ReplyDelete