Tuesday 27 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(52)

நபிகளார் மீது-
சுமத்தப்படும்-
குற்றசாட்டுகளில்-
ஒன்று!

பலதார மணமும்-
ஒன்று!

நபிகளாரை-
பெண் பித்தர்-
என்றும்!

சொல்லவே -
வாய் கூசும் அளவிற்கு-
பிரச்சாரம் -
நடக்கிறது-
இன்றும்!

நபிகளார்-
அப்படிபட்டவரானால்!

வாலிப பருவத்தில்-
நாற்பது வயது பெண்ணை-
ஏன் மணந்தார்கள்!?

இருபத்தைந்து ஆண்டுகள்-
அப்பெண்ணோடு (கதிஜா (ரலி)-
வாழ்ந்தார்கள்!

அவரின்-
மரணத்திற்கு பின்தான்-
மறுமணம் -
புரிந்தார்கள்!

மணமுடித்த-
ஒவ்வொரு பெண்களும்!

உட்பட்டுள்ளது-
வெவ்வேறு -
காரணங்களும்!

அதில்-
இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உள்ளது -
வழிகாட்டுதல்கள்!

எப்படிப்பட்டதெல்லாம்-
தவறு என்பதை-
விளக்கியவைகள்!

நபிகளார்-
வாழ்வின் ஒரு பக்கத்தை மட்டும்-
சொல்லவில்லை!

பிறப்பு முதல் -
இறப்பு வரை-
எப்படி நடக்கணும்-என
எதையும் சொல்லாமலில்லை!

இல்லற வாழ்கை-
இதில் ஒன்று!

நபிகளாரின்-
துணைவியாளர்களின் வாயிலாக-
அறியலாம்-
இன்றும்!

மனைவியர்களிடம் -
எப்படியெல்லாம்-
கண்ணியமாக நடந்தார்கள்!

எப்படியெல்லாம்-
சமமாக நடத்தினார்கள்!

அத்தனையையும்
சொல்கிறது-
நபியின் மனைவிமார்களின்-
வார்த்தைகள்!

அதனையும்-
இஸ்லாமியர்களுக்கு-
நேர் வழி காட்டுபவைகள்!

நபிகளார் காலத்தில்-
பெண்ணென்பவள்-
ஒரு பொருட்டே அல்ல!

இஸ்லாம் -
வந்த பிறகே-
கட்டுப்பாடு விதித்தது-என்பது
பொய்யில்லை!

(தொடரும்....)


1 comment:

  1. ஆகம விளக்கம்..
    மிக அருமை நண்பரே...
    தொடருங்கள்..

    ReplyDelete