Sunday 4 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (32)

"போனவர்களை"-
மீட்டு விட!

மீண்டும்-
சித்திரவதைக்கு-
உள்ளாக்கிட!

எதிரிகளால்-
அனுப்பபட்டார்கள்!
இருவர்!

அம்ரு-
அப்துல்லா -எனும்
பெயர்கள் கொண்ட-
இருவர்!

அன்பளிப்புகளுடன்-
மன்னர் நஜ்ஜாஷியை-
சந்தித்தார்கள்!

பெற்றோர்களை விட்டு-
சிலர் வந்து விட்டார்கள்-என
முறையிட்டார்கள்-
மன்னரிடம்!

"பேசிவைத்தவர்களும்"-
ஆமாம் போட்டனர்-
மன்னரிடம்!

அழைத்துவரபட்டார்கள்-
முஸ்லிம்கள்!

காரணம் சொல்ல-
ஆரம்பித்தார்கள்!

ஜாஅபர்(ரலி)-
அவர்கள்!

"நாங்கள் -
வரம்பு மீறி நடந்தோம்"

அண்டை வீட்டாரோடு-
சண்டையிட்டு மடிவோம்!

சிலைகளை வணங்கினோம்!

எங்களிருந்தே-
இறைவன் முஹம்மது (ஸல்)-எனும்
தூதரை அனுப்பினான்!-
அவர்களின் உபதேசத்தை -
கடைபிடித்தோம்!

இவர்களின்-
கொடுமைகளுக்கு உள்ளானோம்!

இவர்கள்-
தவறுகளை செய்ய -
சொல்கிறார்கள்!

அது முடியாது-என்றேதான்
இங்கே வந்தவர்கள்!

உண்மையை-
அறிந்த மன்னர்!

தங்கிட-
அனுமதித்தார்!

அனுப்பிட-
மறுத்தார்!

மறுநாளும்-
சூழ்ச்சி செய்தார்கள்!

அவர்களே-
தோற்றார்கள்!

நல்லவேளையாக-
இப்போதுள்ள-
கேடு கெட்ட-
சில ஊடகங்கள்-
அப்போதில்லை!

இருந்திருந்தால்-
மன்னரையும்-
திசை மாற்றிருப்பார்கள்-என்பது
பொய்யில்லை!

ஹபஷாவில் கிடைத்த -
தோல்வியால்!

மக்காவில்-
இன்னும்-
 கொடுமைகள் கூடியது-
அநியாயகாரர்களால்!

நபி முஹம்மது (ஸல்) மீதும்-
கொலை முயற்சி!

ஆனாலும்-
கொடுமைகள் எனும் இருளில்-
இரு  ஒளி கீற்று தெரிஞ்சிச்சி!

(தொடரும்....)







1 comment: