Wednesday 28 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (54)

"கொடுக்கிற  நாயன்-
கூரையை பிச்சிகொண்டு கொடுப்பான்-"
இது கிராமத்து சொல்லாடல்!

கூரையாவது பிச்சி வைப்பது(முயற்சி)-என்பது
இஸ்லாமிய கோட்பாடுகள்!

இலட்சியத்திற்காக-
பயணிப்பது-
படுத்தே கிடப்பதல்ல!

மரண படுக்கை வரை -
கூடவே வரும்-
சுவாசம் போல!

இலட்சியத்திற்கான-
சரியான திட்டமிடல்!

இலக்கை நோக்கி-
பயணமாதல்!

மனிதர்களை-
இறைவன் படைத்தது!

நன்மை -
தீமையால்-
மனிதர்களை-
சோதிப்பது!

சாதக -
பாதகம்-
எது நடந்தாலும்-
இறைவனையே சார்வது!

தானாக-
வெற்றி வாய்த்தாலும்-
இறைவனையே-
துதிப்பது!

இலட்சியத்திற்காக-
ஒரு குச்சியை-
நகர்த்தினாலும்!

ஒரு மலையையே-
குடைய-
முனைந்தாலும்!

அதற்கான -
கூலி -
இறைவனிடம்-
கிடைக்கும்!

அதுவே-
இறை நம்பிக்கையாகும்!

நபிகளாரும்-
இலட்சியத்திற்காக
அத்தனை -
ஏற்பாடும் செய்தார்கள்!

அத்தனை -
வலிகளையும்-
பொறுத்தார்கள்!

தன்னாலான-
அத்தனை -
முன்னேற்பாடுகளையும்-
செய்தார்கள்!

இறை உதவியவே-
நம்பினார்கள்!

(தொடரும்...)








1 comment:

  1. கணிணி பழுது ஆனதால் தொடரை தொடர முடியவில்லை நண்பரே! விரைவில் முழுதும் படிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete