Saturday 10 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் ! (36)

சல்லடைகளுக்கு -
துளைகள்-
என்ன புதிதா!?

உத்தமர்களுக்கு-
துயரங்களும்-
புதிதா!?

கண்மணி-
 நாயகத்திற்கு!

கண் போன்று-
இருந்தவர்களுக்கு!?

மரணங்கள்-
சம்பவித்தது!

நபிகளின்-
ரணங்களில்-
இன்னும்-
வலியை-
சேர்த்தது!

பெரிய தந்தை-
அபூதாலிபும்-
மரணித்தார்கள்!

அருமை துணைவியார்-
கதிஜா (ரலி) யும்-
மரணித்தார்கள்!

அபூதாலிபும்-
கடைசி வரை-
இஸ்லாத்தை-
 ஏற்கவில்லை!

நாயகமும்-
கடைசி வரை-
ஏகத்துவத்தை-
சொல்லாமலில்லை!

நபிகளார்-
மறுமணம்-
புரிந்தார்கள்!

சவ்தா (ரலி)-எனும்
விதவையை-
மணந்தார்கள்!

வரலாற்று ஆசிரியர்களும்!
அறிவு ஜீவிகளும்-
திகைத்து நிற்பார்கள்!

அன்றைய-
முஸ்லிம்களின்-
தியாகங்களின்-
முன்னால்!

கஷ்டங்களை-
தாங்கியதின்-
காரணங்கள்!

இறை நம்பிக்கையும்!
மறு மையின்-
மேலுள்ள நம்பிக்கையும்!

படும் வேதனைகளுக்கும்-
சோதனைகளுக்கும்-
கூலி நிச்சயம்-
கிடைக்கும்!

வல்ல நாயகனின்-
முன்னால்-
நீதி நிலைக்கும்!

நபிகளார்-
ஏகத்துவத்தை-
சொல்லிட சென்றார்கள்-
தாயிப் நகரம்!

அதுவோ-
வேதனை செய்வதில்-
நரகம்!


(தொடரும்.....)


1 comment:

  1. //சல்லடைகளுக்கு -
    துளைகள்-
    என்ன புதிதா!?
    //

    நல்ல எடுத்துக்காட்டு.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete