Sunday 25 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (49)


உம்ரா செய்திட சென்றார்கள்-
இதற்கு  முன்னால் சென்றவர்கள்!

சிலர் மட்டும் -
கலந்துகொள்ளவில்லை-
அவர்கள் -
இடைப்பட்ட காலத்தில்-
மரணித்தவர்கள்!

"எதற்கும்"தயாராகவே-
உம்ராவுக்கு-
தயாரானார்கள்!

நம்பிக்கையாளர்கள்-
கூட்டம்!

இறை திருப்தி-
மட்டுமே-
நாட்டம்!

முஸ்லிம்களின்-
துணிவை-
பார்த்து!

நிராகரிப்போருக்கு -
உடல் நனைந்தது-
வியர்த்து!

இனிதே-
உம்ராபயணம்-
முடிந்தது!

பிரச்னை-
வேறு வழியில்-
வந்தது

நபிகளார் கூட்டத்தில்-
இணைந்தது-
குஜா ஆ எனும்-
கிளை!

எதிரணியில் இருந்தது-
பக்ர் எனும்-
கிளை!

எதிர்  எதிர் அணியில் உள்ள-
கிளையினருடன்-
இரு அணியியுமே -
சண்டைகள் கூடாது-
உடன்படிக்கையின் சாராம்சம்!

குஜா ஆ கிளையாருடன்-
பக்ர் கிளையார்-
அட்டகாசம்!

இந்த -
அத்து மீறல்!

முஸ்லிம்களை-
கொதித்தெழவைத்தவைகள்!

சமரச பேச்சுவார்த்தைக்கு-
மக்காவிலிருந்து-
அபு சுப்யான் -
வந்தார்கள்!

பேசிபார்த்தார்கள் !

நபிகளார்-
மௌனித்தார்கள் !

நபி தோழர்களும்-
மௌனம் காத்தார்கள்!

அபுசுப்யான்-
தோல்வியுடன்-
திரும்பினார்கள்!

மக்காவாசிகள்-
கலக்கம் அடைந்தார்கள்!

எந்த-
இடத்திலிருந்து-
வந்தார்களோ!

அந்த -
மக்காவிற்கு சென்றிட-
மறுப்பார்களோ !?

இதயத்தை தேடி-
ரத்தம் பாய்கிறது!

இதனை தடுக்க-
இறைவனை தவிர்த்து-
யாரால் -
தடுக்க முடிவது!?

(தொடரும்....)












1 comment: