Friday 30 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (57)

கடைசி நாள்!

இவ்வுலகை-
நபிகளார்-
பிரியும் நாள்!

உறவுகள்-
நபிகளாரை-
பார்க்க சென்றார்கள்!

இனி -
எப்போது பார்ப்போம்-என
ஏங்கி சென்றார்கள்!

நபிகளார்-
தன் மகளார்-
பாத்திமா (ரலி)விடம்-
இரு செய்திகளை-
சொன்னார்கள்!

முதல் செய்தி-
கேட்டு விட்டு-
பாத்திமா (ரலி)-
அழுதார்கள்!

மறு செய்தி-
கேட்டு விட்டு-
சிரித்தார்கள்!

பின்னொரு நாளில்-
பாத்திமா(ரலி)விடம்-
விசாரித்தபோது!

அழுதது-
"இதே வலியால்-
நான் இறந்திடுவேன்-என
தந்தையார் சொன்னபோது!

சிரித்தது-
தந்தையை சந்திக்க-
நானே முதல் செல்வேன்-என
சொன்னபோது!

நேரம் வந்துவிட்டது!

"இறை தூதர்கள்!
வாய்மையாளர்கள்!
இறை போர் தியாகிகள்!
நல்லோர்கள்!ஆகிய
நீ!
நல்லருள் செய்தோருடன்!
அல்லாஹ்வே!
என்னை மன்னிப்பாயாக!
என் மீது கருணை காட்டுவாயாக!
உயர்ந்த நண்பனுடன் என்னை சேர்ப்பாயாக!
அல்லாஹ்வே!
உயர்ந்த நண்பனை...!
இதுவே நபிகளாரின்-
கடைசி வார்த்தைகளானது!

உலகை விட்டு-
பிரிந்தார்கள்!

இறைவனிடம்-
சேர்ந்தார்கள்!

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காக இருக்கிறோம்!
அவனிடமே மீள்வோம்!

சத்திய ஜோதி-
நபிகளாரால்-
இறை நாட்டப்படி-
ஏற்றப்பட்டது!

அவ்வொளியில் -
பயணிக்கவேண்டியது-
முஸ்லிம்களின் -
கடமையானது!

முஹம்மது (ஸல்)-அவர்களே
இறுதி தூதர்!

அந்த -
தூதுத்துவத்தை ஏற்று -
நடப்பவர்!
முஸ்லிம்களாவர்!

உலக முடிவுவரை-
இதுதான்!

நல்லவர்கள் யார்!?
கெட்டவர்கள் யார்!?-என
நியாய தீர்ப்பு கிடைக்கும்-
இறைவனின்-
முன்னால்!

இத்தொடருக்குதான்-
முற்றும்!

இஸ்லாத்தின் பயணமோ-
முடிவே இல்லாமல்-
தொடரும்!

------------முற்றும்------------------
//சில அரபு சொற்களுக்கு விரிவாக்கமும் விளக்கமும்.

ஸல்- விரிவாக்கம்-சல்லலாஹு அலைஹி வசல்லம்
பொருள்; அல்லாஹ் அவர்களுக்கு
விசேச அருளையும் ஈடேற்றத்தையும் வழங்குவானாக!

உம்ரா-உபரியாக காபதுல்லாவை தரிசனம் செய்வது.

ஹஜ்-காபதுல்லவை தரிசிப்பதும் மற்றுமுள்ள செயல்களும்.

ரலி-விளக்கம்-ரலியல்லாஹு அன்ஹு
பொருள்; அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.//

1 comment:

  1. நடுவே சில பகுதிகளை பயணத்தின் காரணமாக படிக்க இயலவில்லை. தில்லி சென்றதும் படித்து விடுகிறேன்.

    சிறப்பான தொடர்..... வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete