Friday 9 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(35)

உலகம்-
விசித்திரமானது!

நல்லது-
சொன்னால்-
கெட்டது -
செய்வது!

அழகிய சொற்களுக்கு-
அசிங்க வார்த்தைகளை-
தருவது!

அகிம்சைகளுக்கு-
இம்சை தருவது!

நல்லது சொன்ன-
நாயகத்தால்-
ஒதுக்கபட்டார்கள்-
கிளையாளர்களும் !

நசுக்கியது-
பொல்லாத-
தீர்மானங்களும்!

"பகீழ்" என்பவனால் -
எழுதப்பட்டது!

காபதுல்லாவில்-
தொங்கவிடப்பட்டது!

கொடுக்கல்-
வாங்கல்-
நிறுத்தப்பட்டது!


நபிகளாரும்-
உறவுகளும்-
இலை தளை களை -
உண்ண வேண்டியதானது!

வேதனை!
வேதனை!

சொல்ல முடியாத-
சோதனை!

ஹிஷாம்-
சுஹைர் -
எதிர்த்தார்கள்!

தீர்மானத்தை -
கலைத்திட -
துணிந்தார்கள்!

ஆலோசித்தார்கள்!

ஓலையை -
கிழித்து-
எறிந்தார்கள்!

அபூதாலிபின்-
மரண காலமும் -
நெருங்கியது!

எதிரிகளுக்கு-
கலக்கத்தை-
தந்தது!

இவர் இறந்தபின்-
முஹம்மது(ஸல்)-அவர்களுக்கு
எதுவும் நடந்தால்-
நாம் அபூதாலிபுவிற்கு -
பயந்ததாக!

எண்ணினார்கள்-
அதற்குள்-
"பேசி முடிப்பது"-
நல்லதாக!


சொல்லிபார்த்தார்கள் !

நபிகளார்-
ஏகத்துவத்தை-
சொன்னார்கள்!

அபுதாலிப்-
மரணித்தார்கள்!

நபிகளாரை-
தொடர்ந்தது-
சோதனைகள்!

(தொடரும்...)

2 comments: