Monday 26 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (51)

நபிகளார் -
மக்காவில்-
உபதேசித்தார்கள்!

இறைவனின் தன்மைகள்!
அவனது ஆளுமைகள்!

இஸ்லாத்தின் சட்டங்கள்!
அதன் சீர்திருத்தங்கள்!

இன்னும்-
சொன்னவைகள்-
ஏராளனமானவைகள்!

மதீனத்து முஸ்லிம்களுக்கு( அன்சாரிகள்)-
மன வருத்தம்!

நபி -
இனி மக்காவிலா!?-
மதீனாவிலா!?-என்கிற
ஏக்கம்!

அறிந்தார்-
நபிகளார்!

வாழ்ந்தாலும்-
வீழ்ந்தாலும்-
உங்களோடுதான்-(மதினாவில்)
முன் மொழிந்தார்கள்-
நபிகளார்!

ஹிந்த் பின் உத்பா-எனும்
பெண்மணி!

இஸ்லாத்தில் -
இணைந்திட வந்தார்-
அப்பெண்மணி!

அப்பெண்ணுக்கு-
நபியை -
சந்திக்க பயம்!

அதன்-
காரணம்!

உஹது போரில்-
நபியின் -
சிறிய தந்தை ஹம்ஜா(ரலி)-
இறந்தபோது!

அவரின் உடலை -
அப்பெண்மணி-(ஹிந்த்)
சின்னாபின்னமாக்கினார்-
கோபத்தின்போது!

அப்பெண்ணை கூட-
நபிகளார்-
மன்னித்தார்கள்!

அப்பேர்பட்ட-
நபிகளாரை-
எப்படியெல்லாம்-
சித்தரிக்கிறது-
ஊடகங்கள்!

மதீனாவிற்கு-
நபிகளார்-
திரும்பினார்கள்!

அலை அலையாக-
இஸ்லாத்தில் இணைந்தார்கள்-
மக்கள்!

(தொடரும்....)








1 comment: