Friday 23 August 2013

இஸ்லாமும் - நபிகள் நாயகமும் (46)

நேருக்கு நேர்-
வந்தது-
இருபடையும் !

அழிக்க துடித்து வந்தது-
நிராகரிப்போர் -
படையும்!

தற்காத்துக்கொள்ள -
வந்தது-
முஸ்லிம்கள்-
படையும்!

இதுவே-
இவ்விரு படைகளின்-
வித்தியாசம்!

முதல் மோதல்-
ஒத்தைக்கு-
ஒத்தை !

ரத்தம் சிகப்பாக்கியது-
நிலத்தை !

மூன்று பேர்கள்-
காலி-
எதிரணியில்!

முஸ்லிம்கள் படை-
மகிழ்வில்!

படைகள்-
மோதிக்கொண்டது !

ஓ !வென-
எக்கு திக்கிலும்-
சப்தம் -
கேட்டது!

இறை உதவிக்காக-
நபிகளார்-
பிரார்த்தித்தார்கள்!

கண்ணீர் வடித்து-
மன்றாடினார்கள்!

நிராகரிப்போர் படை-
சிதறியது !

இறை நம்பிக்கையாளர்கள் படை-
விரட்டியடித்தது!

அபூஜஹ்ல் மமதையில்-
அலைந்தான்!

இரு வாலிபர்கள்-
கைகளால்-
செத்தொழிந்தான் !

மதீனாவில்-
முஸ்லிம்கள்-
வெற்றி செய்தி கேட்டது!

மக்காவில்-
ஒப்பாரி சப்தம்-
கேட்டது!

எதிராளிகளும்-
நயவஞ்சகர்களும்-
பழிவாங்க-
வாளை உறைக்குள்-
வைக்கவில்லை!

முஸ்லிம்களும்-
தற்காக்க தயங்கவில்லை!

(தொடரும்....)



No comments:

Post a Comment