Friday 14 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (29)

அமைச்சரவை கூட்டம்!

முக்கிய அதிகாரிகளுக்கும்-
அழைப்பு விடுக்கபட்டிருந்தது-
நாடெங்கும்!

ஆதலால்-
கலந்துக்கொண்டிருந்தார்கள்-
புது முகங்களும்!

சொல்ல வேண்டிருந்தது-
அனைத்து விபரங்களையும்!

ராஜ குருவிற்கு -
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது!

கூட்டம் ஆரம்பமானது!

மன்னர் எழுந்தார்!

''நாட்டின் நலன் விரும்பிகளே!
சேர நாட்டின் சொத்துக்களே!

நான் சொல்லிட போவது!
புதிய சிந்தனைகளானது!

அமைதியாக கேளுங்கள்!
சந்தேகங்களாயினும் கேளுங்கள்!

ராஜ குரு மறைந்ததினால்!
குரு எனும் பதவியை ஒழிக்கிறேன்-
நடந்த சம்பவங்களினால்!

இனி-
அர்ச்சகர்கள் ஆலய பணிகளையே-
கவனித்திடனும்!

ஒற்றர்களெனும் பொறுப்பலிருந்து-
விலக்கிடனும்!

அவையில் சலசலப்பானது!
மன்னரின் கைகள் அமைதி என்றது!

''காரணங்கள் உள்ளது!

சொல்கிறேன்-
உங்களது மனம் பொறுமை காக்க-
வேண்டியுள்ளது!

கடவுளின் நகைகள்-
களவு போயுள்ளது!

அதிர்ஷ்டவசமாக -
நம்மிடமே திரும்பி விட்டது!

விக்ரஹங்கள்-
சோழ,பாண்டிய நாடுகளுக்கும்-
கடத்தப்பட்டுள்ளது!

வடக்கத்திய நாடுகளுக்கும்-
கடத்தப்பட்டுள்ளது!

அரசதந்திர முறையில்-
மீட்க வேண்டியுள்ளது!

இதில் பெரும்வேதனை -
ராஜ குரு கைகளும் உடன்பட்டுள்ளது!''

இடையே-
ஒருவர் கேட்டார்!

''அரசே!
இதில் அரபுக்கள் காரணமாக இருக்கலாம்..!?''

மன்னர்-
பதிலுரைத்தார்!
''அவர்கள் உதவிடவில்லையென்றால்-
கிடைக்காமலே போயிருக்கலாம்..!!''

இன்னொருவர்-
வேறொரு கேள்வி கேட்டார்!

மன்னர் பதிலுரைக்காமல்-
சேதுபத்திரரை பார்த்தார்!

சேதுபத்திரர் பதிலுரைக்க-
எழுந்தார்!

அப்படியென்ன..!? கேள்வி!

''அரபிக்கள் கல்யாணம் செய்ய போகிறார்களாமே!?
என்ன ஜாதி பெண்ணை மணம் முடிக்க போகிறார்கள்..!?-
இதுதான் அக்கேள்வி!

(தொடரும்....!!)


3 comments:

  1. மோசமான கேள்வி ஆயிற்றே...!

    ReplyDelete
  2. அப்போதே ஆரம்பித்துவிட்டதா இந்த பிரச்சனை? தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. பதிவில் கேள்வி கேட்டாயிற்று.... பதில் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete