Friday 21 February 2014

பிறந்த பூமி !(1)

பிரியாத -
பிரிக்க முடியாத -
உறவு!

மண்ணுக்கும்-
மனிதனுக்கும் உள்ள-
உறவு!

நம்மை-
தாய் மடி-
தாங்கியதை விட!

தாய் மண்ணே-
தாங்கியுள்ளது -
அதை விட!

எத்தனையோ பேர்களுக்கு-
பெரும் சோகம்!

தாயின் மறைவும்!
தாய் நாட்டின் பிரிவும்!

மழைத்தூரலின்போது-
நாசியை நிறைத்த மண் வாசம்!

உள்ளங்காலில் சில்லிட்ட-
மண்ணின் ஈரம்!

தழுவிய தென்றல்!

கை நழுவிய காதல்!

இன்னும் சொல்லலாம்-
நீளமாக!

எண்ணங்களை-
அடங்கிட முடியுமா.!?-
எழுத்தினூடாக!

பொருளாதாரத்திற்காக-
நேசித்த மண்ணை-
விட்டுச்செல்கிறோம்!

நேசத்திற்குரியவர்களின்-
தேவைகளுக்காகவும் பிரிகிறோம்!

எத்தூரம் சென்றாலும்-
பிறந்த மண்ணின் நினைவுகள் தாலாட்டும்!

பல நேரங்களில் -
கன்னங்களை ஈரமாக்கும்!

உலகில்-
பிறந்த மண்ணை -
நேசிப்பவர்களும் உண்டு!

அடுத்தவர்களின் மண்ணை-
ஆக்கிரமிக்க துடிக்கும்-
அயோக்கியர்களும் உண்டு!

வாழ்வில்-
வெற்றியும் தோல்வியும் போல்!

ஒரு கோட்டின் இருமுனைகள் போல்!

பிறந்த பூமியை -
அன்புக்கொண்டவர்கள் ஒருபுறம்!

அப்பூமியை -
அடிமையாக்கிட துடிப்பவர்கள் மறுபுறம்!

இவ்விளையாட்டு-
ஓயாத விளையாட்டு!

பெயர்தான் சொல்லபடுகிறது-
காலத்திற்கு ஏற்றதுபோல்-
சற்று மாறுப்பட்டு!

(தொடரும்...!!)


4 comments:

  1. பிறந்த மண்ணின் நினைவுகளை யாராலும் மறக்கவே முடியாது... புதிய தொடரின் ஆரம்பமே அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //எத்தூரம் சென்றாலும்-
    பிறந்த மண்ணின் நினைவுகள் தாலாட்டும்!// உண்மையான உணர்வு..

    ReplyDelete
  3. சிறப்பான தொடக்கம்..... தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. தலைப்பு அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete