Tuesday 18 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (33)

இருக்கைகள்-
வரிசையாக வைக்கபட்டது!

கம்பளங்கள்-
விரிக்கப்பட்டிருந்தது!

மக்கள் கூட்டமோ-
பொங்கி வரும் வெள்ளம்போலானது!

அரண்மனையை தாண்டியும்-
மக்கள் கூட்டம் நின்றது!

பாண்டிய மன்னர்-
மகா வீரபாண்டியர் கலந்து கொள்கிறார்!

முன்னால் மன்னர்-
மார்த்தாண்ட வர்மரும்-
முக்கியஸ்தராக அமர்கிறார்!

மன்னர் ஆரம்பிக்க சொல்கிறார்!

அத்ஹம் சொல்கிறார்!

''அரசே!
பெண்கள் முஸ்லிமாவதற்கான முறைகள் சொல்லனும்...!

மணபெண்கள் அழைத்து வரப்பட்டார்கள்!
மன்னர் கட்டளையிடவும்!

ஒரே விதமான ஆடை!
ஒரே விதமான ஜோடனை!

இதில்-
மீனவ பெண்கள் யார்!?
சேதுபத்திரர் மகள் யார்!?
தளபதியார் தங்கை யார்!?-
வித்தியாசமே தெரியவில்லை!

அத்ஹம் -
ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி கொடுத்தார்!

மணப்பெண்களும் சொல்லினர்!

''பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹி! -என
அத்ஹம் சொல்லிக்கொடுத்தார்!

மணப்பெண்கள் உட்பட-
பலரும் முணுமுணுத்தனர்!

''இதற்கு அர்த்தம்..!?-
மன்னர் கேட்டார்!

''முதலில் சொன்னற்கு-
'அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிகறகிறேன்!

இரண்டாவது சொன்னதற்கு-
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை.முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இறைவனின் இறுதி தூதராவார்!-
இதுவே அர்த்தமாகும்-
அத்ஹம் சொன்னார்!

''ம்..ம்..! தொடருங்கள்..!-
இது மன்னர்!

அத்ஹம் தொடர்ந்தார்!

''அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்,
அர்ரஹ்மானிர்ரஹீம்,
மாலிக்கி யவ்மித்தீன்,
இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்,
இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம்,
ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம்,
கைருல் மஃழூபி அலைஹிம் வலல்லால்லீன்..!!''

அரபியில் சொல்லிய பின்-
தமிழில் சொன்னார்!

''புகழனைத்தும் அண்ட சராசாரங்களை படைத்து பாதுகாக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அவன் அளவற்ற அருளாளன் ,நிகரற்ற அன்புடையோன்,

நியாய தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆவான்,

அல்லாஹ்வே உன்னையே வணங்குகிறோம்,

உன்னிடமே உதவி தேடுகிறோம்,

அது வழி தவறி போனவர்களின் பாதையுமலல்லாமல்,

உன் கோபத்திற்குள்ளானவர்கள் வழியுமல்லாமல்,

என்னை நேர்வழிபடுத்துவாயாக.,!

இதனை சொல்லக்கொடுத்தார்!
மேலும் தொடர்ந்தார்!

''அந்த அல்லாஹ் தனித்தவன்,
யாருடைய தேவையும் அற்றவன்,
அவனை யாரும் பெறவும் இல்லை,
எவராலும் பெறப்படவும் இல்லை,
அவனே சர்வ வல்லமை மிக்கவன்,-என்பதை
நம்பிக்கை வைக்கிறோம்!

நாங்கள் முஸ்லிமாகிறோம்!-என்பதனை
மூன்று முறை சொல்லிக்கொடுக்கிறார்.!

அத்ஹம் -
கொஞ்ச கொஞ்சமாக சொல்லிக்கொடுத்தார்!

மணாளிகளும் சொல்லினர்!


''அரசே!
இவர்கள் முஸ்லிமாகி விட்டனர்-
நீங்கள் அனுமதித்தால் திருமணத்தை நடத்திடலாம்..!!-
அத்ஹம் மன்னரிடம் கூறினார்!

''அத்ஹமே!
நீங்கள் சொல்லிக்கொடுத்ததை-
நானும்தான் சொன்னேன்!

அப்படியென்றால்-
நானுமா முஸ்லிம் ஆனேன்!?-
மன்னர் கேட்டார்!

''அரசே!
வெறும் வார்த்தைகளை சொல்வதினால்-
முஸ்லிமாக மாட்டார்கள்!

உள்ளத்தால் ஏற்றுக்கொண்டவர்களே -
முஸ்லிமாவார்கள்!
இனி-
மற்ற கடமைகளை கணவன்மார்கள்-
சொல்லிக்கொடுத்துக்கொள்வார்கள்!
அத்ஹம் சொன்னார்!

''சரி சரி!..!தொடருங்கள்!-
மன்னர் சொன்னார்!

''அரசே!
நீங்கள் வந்து சாட்சியாக இருங்கள்!''

மஹர் தொகையை ஆண்கள் தருவார்கள்!

அதனை மணாளிகளிடம் கொடுத்து சம்மதம் பெறுங்கள்!''-
அத்ஹம் சொன்னார்!

''மஹர் '' பணம் இல்லையானால் -
திருமணம் முடியாதா..!?-
மன்னர் கேட்டார்!

வாக்குறுதி கொடுத்தும் மணமுடிக்கலாம்-
வாழ் நாளில் கொடுத்துக்கொள்ளலாம்-
அத்ஹம் சொன்னார்!

வாழும் காலத்தில் கணவர் இறந்து விட்டால்..!-
இது மன்னர்!

அவரது வாரிசுகளிடம் பெற்றுக்கொள்ளலாம்..!-
அத்ஹம் சொன்னார்!

ம்..ம்!!-
இது மன்னர்!

மணாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள்!

பெண்ணின் பெற்றோர்கள் வந்தார்கள்!

ஆட்சேபனை உள்ளதா..!?கேட்கப்பட்டார்கள்!

இல்லையென்றார்கள்!
ஒவ்வொரு ஆணின் பேரும்-
பெண்ணிண் பேரும் வாசிக்கப்பட்டது!

ஆணிடமும் -பெண்ணிடமும்-
சம்மதங்கள் கேட்கப்பட்டது!

திருமண ஒப்பந்தம் முடிந்தது!

அத்ஹம் -
''குத்பா''எனும் பிரார்த்தனை செய்தார்!

மணமகன்கள் -
கையேந்திக்கொண்டு ''ஆமீன்''என்றார்கள்!

மணமகள் -
அதனை பார்த்து செய்தார்கள்!

மற்றவர்களும் அதனையே செய்தார்கள்!

மூத்த அமைச்சர் சேதுபத்திரர்-
எழுந்தார்!

மணமக்களுக்கு-
வாழ்த்தினை பகின்றார்!

அடுத்த வார்த்தை வராமல்-
தழுதழுத்தார்!

சொல்ல முடியாமல் தவித்தார்!

இதுவரை சந்தோசமாயிருந்த-
மக்கள்!

சேதுபத்திரர் வார்த்தையில்-
கண்ணீருக்கு சொந்தமாக போகிறார்கள்!

(தொடரும்..!!)

குறிப்பு;
// அரபிக்களுக்கும் , நம் நாட்டு பெண்களுக்கும் பிறந்த சந்ததிகளே ''மாப்பிள்ளா''என்றும்''மாப்பிள்ளைமார்கள்''என்றும் அழைக்கப்பட்டார்கள்.இவ்வம்சாவழியினர் வெள்ளையனை எதிர்த்து கடுமையாக போராடியவர்கள் என்பது குறிப்பிடதக்கது//

4 comments:

  1. அனைத்தும் சுபம்... சேதுபத்திரர் என்ன சொன்னார்...?

    ReplyDelete
  2. அட அருமை சகோ..எவ்வளவு வரலாற்றுத் தகவல்கள்!! நன்றி!

    ReplyDelete
  3. நிறைய அறிந்து கொள்ள முடிகிறது! நன்றி!

    ReplyDelete
  4. பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது இத்தொடரில்.... தொடர்கிறேன்.

    ReplyDelete