Wednesday 2 December 2015

எழுத்தேற்றம்..!!


எழுத்தேற்றம் வைத்துதான்
நானும் இரைக்கிறேன்!

என் உள்ளக்கிணற்றில் நிரம்பிடும்
சிந்தனைகளை..!!

அச்சிந்தனைகள் மழையாகப் பொழிந்தாலாவது
பருவ காலத்தில் வந்து ஓய்ந்திடும் என நானும் ஒதுங்கிடுவேன் !

ஆனால் அதுவோ ஊற்றாக அல்லவா
பீறிடுகிறது!

இரைக்க இரைக்க ஊருகிறது!

இரைக்காதிருந்தால்
என்னை மூழ்கடிக்கிறது!

நானும் என்ன செய்ய..!?

அடுப்போடும் நெருப்போடும்
பிழைப்போட்டும் எனக்கு எழுதுவது தேவையில்லை தான்..!!

ஆனாலும்
நான் மூர்ச்சையாகி விடாமலிருக்க
எழுத்தேற்றம் கொண்டு இரைப்பதை விட
வேறு வழியில்லை..!!

     

No comments:

Post a Comment