Wednesday 30 March 2016

ஒத்தன முத்தம்..!!


நனைத்து பிரிந்த கடல் அலை
ஈரத்தை விட்டுச் சென்றதைப் போல்!

உரசிச் சென்ற கடற்காற்று
ஒட்டிச் செல்லும் பிசுப்பிசுப்பைப் போல்!

மறையும் சூரியன்
விட்டுச் செல்லும் நிலவினைப் போல்!

சோம்பல் முறித்து உடலைச் சிலிர்த்துச் சென்ற சேவல்
உதிர்த்திட்ட இற்குகளைப் போல.!

வளைக்குள் நுழைந்திட்ட நண்டுகள்
பதித்துச் சென்ற தடங்களைப் போல்!

ஒத்தன இதழ்முத்தம்
மிச்சம் வைத்திட்ட எச்சிலைப் போல்!

உண்டு உமிழ்ந்த வெத்தலை
உதட்டில் சிகப்பாய் தங்கி இருப்பதைப் போல் !

நீ என்னை வெறுத்துச் சென்றிருந்தாலும்
என்னுள் விதைத்துச் சென்றிருக்கிறாய் கவிதைகளை..!!

     -/இந்த கவிதை சிங்கபூரில் வெளியாகும் "தி சிராங்கூன் டைம்ஸ் "ல்
வெளியாகி இருந்தது,ஜனவரியில்//

No comments:

Post a Comment