Wednesday 19 April 2017

நிஸாவின் கையெழுத்து 1



    94-95ம் வருச காலகட்டம் அது.".மாரியூர் பஸ் ஸ்டாப்புல இருந்து கொஞ்ச தூரம் உள்ளே போனா வந்துரும்."அரசு உயர்நிலைப்பள்ளி .M மாரியூர்"னு ஆர்ச் நம்மள வரவேற்கும்.அப்போமெல்லாம் பள்ளிக்கூடம் பக்கத்துல நெறய வீடுக இல்ல.பக்ருதீனோட அண்ணன் ரகீமோட வீடு.அதுக்கு பக்கத்துல சேகு மாமா வீடு.எதுத்தாப்ல கக்கிம் வீடு இவ்வளவுதான்.பக்கத்துல கொஞ்சம் வீடுக கட்ட ஆரம்பிச்சிக்கிட்டு இருந்தாங்க.அந்த பள்ளிக்கூட ஆர்ச்சிக்குள்ள போனா எடது பக்கமா ஒரு கட்டடம்,அதுதான் ஒம்பதாம் வகுப்பு.அதுக்கு பக்கத்துல ஒரு தண்ணித்தொட்டி ,ஒரு வேப்ப மரமும் இருக்கும்.இந்த ஒம்பதாப்புக்கு நேர் எதுத்தாப்புல ,ஒரு கட்டடம் அதுலதான் ,"ஹெட் மாஸ்டர்"ரூம்பும்,பத்தாம் வகுப்பும் இருக்கும்.இந்த பள்ளிக்கூடத்திற்குதான்,ஒப்பிலான்,பெரியகுளம் ,முந்தல் வரை உள்ள பசங்கள்,ஒம்பது ,பத்து படிக்க வரனும்.

    ஒம்பதாம் வகுப்புலதான்,நானும்,சேக்கும் ஒப்பிலான்ல இருந்து சேந்துருந்தோம்.எங்களோடதான் முருகன்,சக்திவேல் ,கார்த்திக்கேயன்,சமது, ஒமர்,பிர்தௌஸ்னு படிச்சாங்க.பொம்பள புள்ளைங்கள்ள ,ஜெயா,விஜயலக்ஷ்மி ,சரிபு நிஸா"னு கொஞ்சப் பேரு படிச்சாங்க.என்னோட வந்த சேக்கு ,கொஞ்ச நாள்ல படிப்ப விட்டுறலாம்னு வந்துருந்தான்.நான் எத்தன நாள் படிப்பேன்னு தெரியாம போயிக்கிட்டு இருந்தேன்.எனக்கு நல்லா படிக்கனும்னு ஆச தான்.ஆனா என்ன செய்ய,ஆச இருக்குற எடத்துல காசு வேணும்ல.ஒப்பிலான்ல இருந்து மாரியூர் வர ,சேக்கோட பழய சைக்கிள்தான்,ஒதவுச்சி,அதுவும் கொஞ்ச நாள்ல புட்டுக்கிச்சி.

      (தொடரும்...)


No comments:

Post a Comment