Friday 7 December 2018

மௌனம்..!

ஏன் என் மௌனத்தை கலைத்திட 
இவ்வளவு பிடிவாதம் கொள்கிறாய்.!?

என் மௌனம்
உனக்கு கோழைத்தனமாகவோ
வீரத்தனமாகவோ
முதிர்ச்சித்தனமாகவோ
முட்டாள்தனமாகவோ
அமைதியாகவோ
அதிர்ச்சியாகவோ
அடக்கமாவோ
அடாவடியாவோ
இப்படியாக ஏதோ ஒன்றாக
உன் விருப்பப்படி என்னைப் பற்றி
பிம்பத்தை வரைந்துக் கொள் 
அதைப்பற்றி நான் கவலைப்பட 
போவதில்லை.

என் மௌனத்தை மட்டும் 
கலைத்திட விரும்பாதே

ஒருவேளை என் 
மௌனம் உடைப்படும் தருணம்
உன் கண்ணில் சில கண்ணீர்த்துளிகள்
விரயமாகலாம்.!





No comments:

Post a Comment