சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday, 2 June 2018
அலை நுரை.!
சமுத்திரமே
உனக்கானதாக இருக்கிறது
நீயோ அலை நுரையில்
முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.!
Thursday, 31 May 2018
தெரு நாய்..!
தெருவில் கிடந்த ஒன்றை
தலையில் தூக்கி ஆடியதற்கு
நன்றிக் கடனாகத் தான்
கருத்து சொல்வதாக
கடித்து குதறி இருக்கிறது
தெரு நாயொன்று..!
Sunday, 6 May 2018
கவலைப்படாதே..
சோதனைப்
பெருங்கடல்
உன்
முன்
நின்றால்
என்ன
.!?
உன்னிடம்
தான்
(
இறை
)
நம்பிக்கை
யெனும்
கைத்தடி
இருக்கிறதே
...
Saturday, 5 May 2018
வேட்டி..
எப்போதாவது
கட்டும்
வேட்டி
எப்பொழுது
அவிழ்ந்து
விடுமோ
என்ற
பதற்றத்தை
போலவே
உன்னை
சந்திக்கும்போதெல்லாம்
வாய்
தவறி
வார்த்தை
வந்து
விழுந்திடுமோ
என
அஞ்சுகிறேன்
.!
Saturday, 28 April 2018
திருந்திருக்கிறேனா..!?
கடல்
அலையே
மரக்கிளையே
நிழலே
விழுதே
தென்காற்றே
தேனூற்றே
மேகமே
தாகமே
என்னை
நினைவிருக்கா
.!?
திரும்பவே
வர
மாட்டேன்
என்றவன்
திரும்பவும்
வந்திருக்கிறேன்
!
திருந்திருக்கிறேனே
எனும்
கேள்வியை
உன்னிடமே
கேட்டு
நிற்கிறேன்
!
Sunday, 22 April 2018
வீணாக்காதே..!!
என்னை
திட்டுவதாக
எண்ணி
உங்கள்
வார்த்தைகளை
வீணாக்கி
விடாதீர்கள்
ஏனென்றால்
அவ்வார்த்தைகளை
சேமித்து
வைத்திட
என்
நெஞ்சுக்
கூட்டிற்குள்
இடமில்லை
!
Tuesday, 17 April 2018
வார்த்தை கல்.!
சில்லுண்ட
என்னைச்
சேர்த்து
வைத்து
காத்துக்
கொண்டிருக்கிறேன்
உன்
வார்த்தைக்
கல்லிற்காக
..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)