Sunday 2 April 2017

சுல்தான் மாமா 3



     மாமாவுக்கு கால சாப்பாடு,அவுக வீட்டு "இஞ்சி சாயா"வும்,செய்யது பீடியும் தான் போல.அதைதான் அதிகம் குடிப்பாக.சாயா தேவப்படும்போதெல்லாம்,"மவுமூதா..மவுமூதா"னு அவுக மனவிய கூப்புவாக.வீடு பக்கத்துல இருக்குறதால,அவுக வீட்ல உள்ள யாராவது,தூக்குச்சட்டியில சாயா கொண்டு வந்து கொடுப்பாக.அந்த சட்டிய தொறந்ததுமே ,இஞ்சி வாசம் ,நாம சாயா குடிச்சது மாதிரி இருக்கும்.முடிய பாதியிலயே விட்டுட்டு,கொவளயில சாயாவ ஊத்தி  குடிச்சிட்டு,பீடி ஒன்ன பத்த வச்சி இழுத்துட்டுதான்,பாதியில விட்ட தல சரி செய்வாக.

      ஒரு பொண்ணு,நாலு பயலுங்க சுல்தான் மாமா புள்ளைங்க.அதுல சகுபருதான் மூத்தவன்.அவனும் நானும் ஒரே வயசுதான்.அவன ஒரு தடவ ,பள்ளிக்கூடத்துல "பட்டப்பேர"சொன்னேனு,அவுக அத்தா கிட்ட சொல்லிட்டான்.அப்போ ஊர்ல IOB பேங்கு கட்டிக்கிட்டு இருந்தாங்க.கட்டடத்துக்கு அடிச்ச ஆத்துமண்ணுல வெளயாடிகிட்டு இருக்கையில.அவர் கிட்ட மாட்டிக்கிட்டேன்."ஏம்பா...!?சகுபர என்னவோ சொன்னியாம்..!?ஒனக்கு என்னமோ "கொரலு" வெங்கலக்கொரலா..!?எறும்பு கடிச்ச மாதிரி கரகர னு பேசிக்கிட்டு தெரியிறா..!?நீ அவன கேலி பண்ணுறீயோ..னு"திட்டி விட்டு போயிட்டாப்ல.பேசுன அவருகூட மறந்துருப்பாரு.ஆனா எங்கூட்டாளி செய்யது ,இத அடிக்கடி சொல்லி சிரிப்பான் இப்பகூட.

    பழய மதரசா ஒடச்சி கட்ட முடிவெடுத்தாங்க.அதோட அந்த முடி வெட்டுற எடமும் காலி.அப்புறம் மரத்தடியில கொஞ்ச காலம் ஓடுச்சி..


2 comments: