Friday 10 July 2020

ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் .!

தாயை தெருவில் விடுகிறாய்
தாரத்தை தாக்குகிறாய்

குழந்தையையும் சிதைக்கிறாய்
நிலத்தையும் மலடாக்குகிறாய்

நதியையும் நாசமாக்குகிறாய்
காற்றையும் விசமாக்குகிறாய்

சுவாசம் தந்தமரம்என்னையும் வெட்ட
கோடாலி தூக்குகிறாய்

வீழ்வதற்கு முன்
ஆம் 
வீழ்வதற்கு முன்
ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் 
எனக்காக அல்ல
உனக்காக.!

2 comments:

  1. இயற்க்கையை அழிப்பதில் மனிதர்கள் கொடியவர்கள்.

    ReplyDelete
  2. நிதர்சனம் சொல்லும் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete