Tuesday 21 July 2020

நிறமற்ற உலகில் நான் ஓவியன்.!

சிற்பிக்கே
பாறை சிற்பம் தரிக்கும்.!

குறவனுக்கே
தேனெடுக்க தேனீக்கள்
வழியை விடும்!

மாலுமிக்கே
அலைகடலும் பாதை காட்டும்!

கவிஞனுக்கே
சிந்தனைகள் தானாய் பிறக்கும்!

ஓவியனுக்கும்
தூரிகையில் நிறங்கள் சுரக்கும்!

நீ தீர்மானி
உலகமும் வளைந்து கொடுக்கும்.!



1 comment: