Saturday 3 October 2015

பாவம் அந்த மாடுகள்!


     உழைப்பிற்கும் ,சாந்ததிற்கும் பெயரின் பிராணியான மாடு தான் இன்றைய இந்தியாவில் "ஹாட் டாபிக் ". ஒரு முறை கர்ம வீரர் காமராசர் அவர்கள்,காரில் சென்றுக் கொண்டிருக்கையில் ,ஒரு கிராமத்துவாசி,காரை மறைத்து கேட்டாராம்,காமராசரிடம் "அய்யா.!சுடுகாட்டிற்கு செல்ல வழி அமைச்சி தாங்க"னு கேட்டார்.அதற்கு காமராசர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்,"நான் "இருக்குறவங்கள"ப் பத்தி கவலைப் படுறேன்.!நீங்க "போறவங்கள"பத்தி கவலைப் படுறீங்க"னு சொன்னாராம்.ஆம் !அய்யா காமராசர் அவர்கள் மனிதர்களின் வாழ்வை உற்று நோக்கினார்.அவர்களது வாழ்வை முன்னேற்ற, வாழ்நாளை கரைத்தார்.ஆனால் இன்று மனிதம் மறந்த மாக்களோ ,மாடுகளைப் பற்றி பேசி,மனிதர்களைக் கொள்கிறது மதங்களைச் சொல்லி. 

        மாட்டு இறைச்சியினை உணவாக உட்கொள்வது,இஸ்லாமிய சமூகத்தின் கட்டாய கடமையில்லை.அது அச்சமூகம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று,இதில் வேடிக்கை என்னவென்றால் இச்சமூகத்தில் மாட்டிறைச்சியை வாழ்நாளில் தொட்டுக்கூட பார்த்திடாதவர்கள் ஏராளமாக,தாராளமாகவும் உள்ளனர்.அதேவேளையில் மாட்டிறைச்சி நாள் தவறாமல் சாப்பிடும் பிற சமூகத்தினரும் உள்ளனர்.ஆனால் இஸ்லாமிய சமூகத்தை முன்னிறுத்தியேதான் இங்கே பேசப்படுகிறது .அதேப்போல் சில நாட்களுக்கு முன் குர்பானிக்கு கொண்டு ச் செல்லப்பட்ட பிராணிகளைத் தடுத்த "ப்ளு க்ராஸ்"அமைப்பினர்.,இவ்வமைப்பினர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை .பிற உயிர்களை காப்பாற்றுகிறார்களாமாம்,அய்யோ அய்யோ !எங்கே இருந்துதான் வருகிறார்களோ இப்படி, !? வருடத்திற்கு ஒரு முறை தான் குர்பானி ,அந்த இறைச்சி கூட ஏழைகளுக்கே பெரும்பான்மையாக பகிரப்படுகிறது ,ஆனால் தினந்தோறும் ஆடு,மாடு,கோழிகளை அறுத்து ஏற்றுமதி செய்திடும் பெரும்தொழில் நிறுவனங்களுக்கு எதிராக என்ன செய்தார்களோ !?.பிற உயிர்களை கொல்ல விரும்பாத "ப்ளு க்ராஸ் "அமைப்பினரே நீங்கள் இனி "ஷாம்பு"தேய்த்துக் குளிக்காதீர்கள் .ஏனென்றால்  உங்கள் தலையில் வளரும் பிற உயிர்களான "ஈரும்,பேனும்"சாகிறதால்.

     "குடிவெறி"யர்கள் "கல்யாணம்"நடந்தாலும் ,"கருமாதி"விழுந்தாலும் குடிப்பார்கள்.அவர்கள் காரணங்களுக்காக குடிக்கவில்லை,குடிப்பதற்காக காரணங்களைத் தேடுகிறார்கள்.அதுப்போல ரத்தவெறியர்களாக இப்பாசிசவாதிகள்,அவர்கள் 1992 ல் ரத்தம் குடிக்க ,ராமரும்-பாபரும் தேவைப்பட்டார்கள்.2002 ல் குஜராத் கலவரத்திற்கு சபர்மதி தீப்பற்றியது,காரணமாக இருந்தது.இப்பொழுது மாட்டை வைத்து மனிதத்தைப் புதைக்கிறார்கள்.புற்பூண்டுகளை சாப்பிட்டு வளரும் மாட்டின் பெயரைச் சொல்லி மனித ரத்தங்களை ஓட்டாதீர்கள்."பாவம் அந்த மாடுகள்".

     

1 comment:

  1. சிலருக்கு எல்லாவற்றிலும் அரசியல் செய்வது பிடித்து இருக்கிறது என்ன செய்ய!

    ReplyDelete