Saturday 1 April 2017

சுல்தான் மாமா 2



     இருபத்தஞ்சி வருசத்துக்கு முன்னால,பள்ளிவாசல் பகத்துலதான் பழய மதரசா .அந்த மதரசாவின் பின்புறமும் ,மீராசா அப்பா வீட்டு காம்பவுண்டு சுவரும் ,நெருக்கமா இருக்கும்,ஒரு ஆளுதான் போகலாம்.அந்த பாதை முடியிற பக்கவாட்டுல,மூனு  வீடு கட்டி ஜமாத்துல ,பள்ளிவாசல்ல வேல பாக்குறவங்க தங்குறதுக்கு கொடுத்து இருந்தாக.மதரசாவோட,அந்த வீடுகளோட  மறுபக்கம்தான்,முடிவெட்டுற எடம் கொடுத்து இருந்தாங்க.அந்த எடம் பட்டியலால் மறச்சி இருக்கும்,ரெண்டு மர நாக்காலி கீழ கால் வைக்க பலகை.ரெண்டு மொகம் பாக்குற பெரிய கண்ணாடி,சுவத்துல மாட்டிய கம்பியில மாட்டி, தூக்குல தொங்குற மாதிரி தொங்கும்.அந்த கண்ணாடிக. அந்த கடைக்குள்ள சாக்பீசால,"பொறுமை கடலிலும் பெரிது"னு எழுதி இருக்கும்.கடைக்கு வெளியில நீளமான கட்டலு போட்டு இருக்கும்,அதுலதான் பெரிய ஆளுங்க உக்காந்து இருப்பாக.சுல்தான் மாமா வருகைக்காக .

     நாங்க சின்ன பயலுக முடி வெட்ட போனா,கடைக்கு பக்கத்துல கெடக்குற "சாந்தாக்கு"பக்கத்துல,வெளயாடிக் கிட்டு இருப்போம்.எப்படியும் லேட்டாதான் முடி வெட்டுவாக,பெரிய ஆளுங்க,வேல இருக்குனு சொல்லி முன்னாடி வெட்டுவாக.நமக்குதான் அத பத்தி கவல இல்லையே,லேட்டாச்சினா பள்ளிக்கூடம் போகாமா இருந்துறலாம்ல அதான். மாமாகிட்ட முடி வெட்ட பயமாவும் கோவமாவும் அழுகயாவும் வரும்,ஏன்னா முடிய "கரச்சி" வெட்டி விடுவாக.எங்கள போல சின்ன ஆளுங்கள,நாக்காலி மேல பலகய போட்டு,அதுமேல ஒக்கார வச்சி,தலயில தண்ணிய அள்ளி தடவி,"அதான் முடியில்லையில .!?எதுக்கு முடி வெட்ட வந்தா"னு திட்டி விட்டு,கரீச் கரீச்னு கத்தரிக்கோலு சத்ததுல,"கரச்சி"எடுத்துருவாரு. எனக்கு அழுகதான் வரும்,பள்ளிக்கூடத்துக்கு போனா,கூட படிக்கிறவனுக கேலி பண்ணுவானுகனு.இதுல மாமா வெட்டும்போது ,தலய அங்குட்டு,இங்குட்டு ஆட்டுனா போச்சி,காத புடிச்சி திருகுவாப்ல.அப்ப அழுக வந்துச்சி.இப்ப அத நெனைக்கைல சிரிப்பு வருது.

(தொடரும்...)


1 comment: