Sunday 15 April 2018

கைக்கொட்டும் துரோகங்கள்...

நான் அந்தி என்கிறேன்
நீ மாலை என்கிறாய்

நான் பூ என்கிறேன் 
நீ மலர் என்கிறாய்

நான் விடியல் என்கிறேன்
நீ அதிகாலை என்கிறாய்

நான் மணம் என்கிறேன்
நீ வாசம் என்கிறாய்

நான்வந்தார்கள்என்கிறேன்
நீவருகைப் புரிந்தார்கள்என்கிறாய்

நான் சமுத்திரம் என்கிறேன் 
நீ கடல் என்கிறாய்!

நாம் இருவரும் சொல்வது
ஒன்றுதான் என புரியாமல்
சண்டையிடும் நம்மைக் கண்டு

கைக்கொட்டி சிரிக்கிறது 
துரோகங்களும் பகைமைகளும்!








1 comment: