Monday 9 April 2018

பேதமை..

ஏழு வர்ணங்களை வானவில்லென ரசிக்கிறாய்

சில வண்ணப்பூக்களின் கூடலை
பூங்கொத்துவென ஏற்கிறாய்

ஆறு சுவை உணவை
அறுசுவை உணவென உண்ணுகிறாய்

கட்டை ,நீளம்,சின்னதென்ற விரல்களை
தன் கையென சொல்கிறாய்!

ஒன்பது விதமான கற்களை 
நவ ரத்தினங்களென அணிகிறாய்.

தேசத்தால்,இனத்தால்
மொழியால் 
வெவ்வேறான  மனிதர்களிடம்  மட்டும்
ஏன் பேதமை கொள்கிறாய்.!?



No comments:

Post a Comment