Thursday 17 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(10)

நீங்கள்!
குர்ஆனைப் படிக்க
முஸ்லிமாக இருக்க வேண்டிய
அவசியமில்லை !

குர்ஆனை படித்ததும்
முஸ்லிமாகிடனும் என்கிற
கட்டாயமும் இல்லை !

விருப்பப்பட்டால்
ஏற்றுக்கொள்ளலாம்!

விரும்பாவிட்டால்
தவிர்த்துக்கொள்ளலாம்!

இது எனது
கருத்தல்ல!

குர்ஆனின் கருத்தும்
இதுதான் என்பதும்
பொய்யில்லை !
-----------------------
குர்ஆனை ஏற்றவர்கள்
வாட்களுக்கு பயந்து
ஏற்கவில்லை !

வாழ்வியல் மாற்றத்திற்காகவே
ஏற்றார்கள்!

ஏற்கிறார்கள்!
----------------------
மனிதர்களிடையே
நிற,உருவ வேறுபாடுகள் !

அடையாளம் கண்டுகொள்ள
இறைவனின் ஏற்பாடுகள்!

அதனைக்கொண்டு
அடித்துக்கொள்கிறது
"அரைவேக்காடுகள்''!
--------------------------
"எந்தவொரு ஆத்மாவிற்கும்,
அது தாங்கிக்கொள்ள முடியாத,
சோதனையை இறைவன் கொடுப்பதில்லை!"-என
இறைமறை சொல்லுதுங்க!

இதனை நம்பிய மனதில்
விரக்தி வருமாங்க..!?
--------------------------

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete