Saturday 5 July 2014

குர்ஆனைப்பற்றிய கவிதைகள்...!!(3)

சோதனையின்போது
தலை கவிழ்ந்திட மாட்டார்கள் !

சாதிக்கும்போது
நெஞ்சை நிமிர்த்திட மாட்டார்கள் !

யார் அவர்கள் !?

அவர்கள்தான் !

குர்ஆனின்
வசனங்களைப் படித்தவர்கள்!

படித்து உணர்ந்தவர்கள்!
----------------------------
குர்ஆனின் வசனங்கள்!

அடிமைத்தனத்தையும்
ஆதிக்க எண்ணத்தையும்
ஆட்டங்காண செய்வது!

ஆதலால்தான்
ஆதரவும் எதிர்ப்பும்
நிரந்தரமானது!
-------------------------
குர்ஆன் என்பது
ஆன்மீகப்பெட்டகம் மட்டுமல்ல!

அறிவியலின்
சுரங்கமும் கூட!

படித்தால்
உணரலாம் !

தயக்கமின்றி
தமிழாக்கத்திலும் படிக்கலாம் !
--------------------------------
ஓ!
மானுட சமூகமே!

பிறப்பிற்கு முன்னாலும்
இறப்பிற்குப் பின்னாலும்
நம் நிலை என்ன..!?

விடை கிடைக்க
ஒருமுறையாவது குர்ஆனை
 படித்தால்தான் என்ன.!?
---------------------------

1 comment:

  1. மூன்று பகுதிகளையும் இப்போது தான் படித்தேன்.......

    தொடர்கிறேன்.

    ReplyDelete