Tuesday 8 July 2014

குர்ஆன் பற்றிய கவிதைகள்..!! {4}

குர் ஆனின் வரிகள்
நபிகளாரின் வாக்கல்ல!

நபிகளின் வழியாக வந்த
இறைவனின் வாக்கு!
----------------------
சிந்தித்து அறிய கூடிய மக்களுக்கு 
பல அத்தாட்சிகள் இக்குர்ஆனில்
உள்ளது!

இக்குர்ஆனை படித்திடத்தான்
நம்மில் எத்தனை உள்ளங்கள்
தயாராக உள்ளது.!?
------------------------------
ஆழ்கடலிலும் மூழ்கிடாத 
கட்டுமரங்களைப்போல்!

இறைவசனங்களை நெஞ்சில் தாங்குபவர்கள்
யார் முன்பும் தாழ்த்துப்போவதில்லை!
--------------------------------
குர்ஆன் 
மானுடத்தை பார்த்து
அதிகம் கேட்கும் கேள்வி!

"சிந்திக்க மாட்டாயா..!?
சிந்திக்க மாட்டாயா..!? -என்று!"

ஓ!
மானுடமே!
சிந்திக்கச் சொல்வதாலா.!?
குர்ஆனை படிக்க மறுக்கிறாய்.!?
-----------------------------------   
    
      

3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. விறுவிறுப்பான
    அருமையான தொடர்
    மாஷா அல்லாஹ்

    ReplyDelete