Saturday 12 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!( 7)

அடுத்தது பெண்ணாக
இருக்கமோ என
கலக்கம் இருக்காது!

அடுத்ததும்
பெண்ணாக வேண்டும் என
ஆசை இருக்கும்!

பெண்ணின் மேன்மையைப்பற்றி
குர்ஆன் சொல்லிருப்பதை
அறிந்திருந்தால் .!
--------------------------
பெண்களுக்கு
ஓட்டு உரிமை கிடைத்தது
கடந்த நூற்றாண்டிலே!

அதனை
சாதனையென
சிலாகிப்பவர்களே!

பதினான்கு நூற்றாண்டுக்கு முன்னரே
சொத்துரிமை கொடுக்கச் சொல்லிருக்கு
குர்ஆனிலே!

அதனை
எப்போதுதான் உணர்வீர்களோ..!?
-----------------------\--------------
ஐந்து பெண்பிள்ளை பிறந்தால்
அரசனும் ஆண்டியாவான் என
சொல்லுவாங்க!

குர்ஆன் சொல்லும்படி
திருமணம் நடந்தால் !

மகள்களை பெத்தவர்
"பிச்சாதிபதியாக" இருந்தாலும்
லட்சாதிபதியாக ஆகிடுவாருங்க.!!
-------------------------------
பெண்களை போகப்பொருளாக
எண்ணும் மூடர்களே!

குர்ஆன் சொல்வதை
படித்துப்பாருங்கள்!

அதன் பின்
பெண்களை
உங்கள் இதயத்துண்டாக
பாதுகாப்பீர்கள்!
-----------------------------

1 comment: