Friday 25 July 2014

கேள்விக்குறிகள்...!!?

கடற்கரை காற்று!
கடலலை சப்தம்!

கொடுக்காப்புலி மரங்கள்!
கல்லடிப்பட்ட புளியங்காய்கள்!


செம்பருத்தி பூக்கள் !
ஆலமர சருகுகள்!

களமாடிய மைதானம்!
பிளந்திருக்கும் நிலம்!

"வாப்பா"வின் கோபம்!
"உம்மா"வின் பாசம் !

இலக்கணப்பிழையான
மழலை பேச்சுக்கள் !

வரம்புமீறிய நண்பனின்
விமர்சனங்கள்!

எத்தனையைத்தான்
இழப்பது
இப்படியாக !

பணத்தை மட்டுமே
தேடுவதாலே!

ஒன்றை இழந்தால்தான்
இன்னொன்றை பெறலாம் என்பது
சரிதான்!

அவ்வொன்றுக்காக (பணம்)
இழப்புகளை கணக்கிட்டால் அடுக்கலாம்
கேள்விக்குறிகளைத்தான்..!!

     

2 comments:

  1. பணத்தை தேடாமலும் இருக்க முடியாது! தேடுகையில் ஏற்படும் இழப்புகள் கேள்விக்குறிகள்தான்! அருமை!

    ReplyDelete
  2. சிறந்த சிந்தனை

    ReplyDelete