Sunday 6 July 2014

இறையோனே..!!

இறைவா!

எங்களது
வார்த்தைகளையும் !
எழுதுதலையும்!

பாதையையும்!
பயணத்தையும் !

வாசிப்பையும்!
நேசிப்பையும்!

ஏக்கத்தையும்!
நோக்கத்தையும் !

உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும் !

உறவு கொண்டாடுதலையும்!
பிரிவு கொள்வதையும் !

ஆவேசத்தையும்!
பொறுமையையும்!

இளமையையும்!
முதுமையையும்!

வாழ்தலையும்!
மரணித்தலையும்!

இறைவா!
எங்களது
அத்தனை நிலைகளிலும் !

உனக்கு
பொருத்தமானதாக ஆக்கிடுவாயாக!

நீ!
எங்களை பொருந்திக்கொள்வாயாக!

அன்பாளனே!
அருளாளனே!

உன்னையன்றி
எங்களது பாதுகாவலன்
யாரிருக்கா..!?
இறையோனே!

   

3 comments:

  1. நிச்சயமாக
    அவனையன்றி நம்மை காக்கத் தகுந்தவன்
    வேறு யாருண்டு
    மனம் கவர்ந்த பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைத்தும் ஆண்டவனே என்பதில் ஐயம் ஏது? அருமை!

    ReplyDelete