Wednesday 1 October 2014

மௌன மொழி..!!

ஆண் கிளியின் கழுத்துக்கோடு!

ஈரக்கூந்தலில் ஒற்றை ரோஜா!

சேலையை தாண்டிப்பார்க்கும் கட்டைவிரல் !

எரிந்து விழும் நட்சத்திரம்!

சோளக்காட்டுப் பொம்மை!

சேவலின் கொண்டை!

கிடாயின் தாடி!

தூங்கத்தில் குழந்தையின் புன்முறுவல் !

அடைகாக்கும் கோழி!

கரையொதுங்கிய படகுகள் !

பென்சிலால் கோடிட்டதுப்போல் முதல் பிறை!

தேவாலய மணிக்குண்டு!

இவைகளெல்லாம்
என்னிடம் எதையுமே பேசாவிட்டாலும் !

நீண்டநேரம் பேசியதுப்போல் உணரச்செய்பவைகள்!

பேசாத பிரியமானவர்களின்
பேசிச் செல்லும் மௌனங்களைப்போல்!

     



1 comment:

  1. அழகான பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete