Monday 27 July 2015

கவிதையே..!!(51-55)

51)
காதல் கொண்டவர்களெல்லாம்
உன்னை எழுதுவார்களெனத் தெரியவில்லை !

ஆனால்
உன்னை எழுதுபவர்களெல்லாம்
ஏதோ ஒன்றின்மேல் 
காதல் கொண்டவர்கள்தான்!

//ஏதோ ஒன்று என்பதினை நீதியின் மீதோ,சமூகத்தின் மீதோ,எதிர்பாலினத்தின் மீதோ,.....இப்படியாக பொருள் கொள்க//
-------------------------------------
கவிதையே..!!(52)
------------------
உன்னைத் தேடி ஓடுவதில்
நான் "இளைக்கிறேன்"எனும்
ரகசியம்!

என் "கிறக்கத்தை"க் கேட்பவர்களுக்குத்
தெரிவதில்லை!
----------------------------------
கவிதையே..!!(53)
------------------
கொஞ்சம் நாளாய்
என்னைக் காணவில்லையென்றாய் 
தேடினாய் !

உனது வேர்களைத் தேடித்தான்
கொஞ்சத்தூரம் போய் வந்தேன்
கவிதையே!
-------------------------------
கவிதையே..!!(54)
--------------------
என்னவளின் கண் மை டப்பாவை
கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டு
வந்துச் சொல்!

நான்
காதல் காவியமொன்று
எழுதிட வேண்டும்.!
-----------------------------
கவிதையே..!!(55)
--------------------
நான் 
கண்ணீர்த்துளியாய் விழுகையில்
உள்ளங்கையால் தாங்கிடாதவர்கள்!

இப்பொழுது தேடுகிறார்கள்!

கவிக்கடல் உன்னில்
நான் கலந்திட்டது தெரியாமல் !
---------------------------------

2 comments: