Monday 10 August 2015

கவிதையே..!!(61-65)


61)
எங்கே தொலைந்தேன்!

எங்கே புதைந்தேன்! என

உனக்குள்தான் தேடுகிறேன் 
என்னை!
------------------------------
கவிதையே..!!(62)
-------------------
கால் நனைத்திட வரும் 
கடலலையிக்குப் பயந்து 
கரை நோக்கி ஓடுவதும்!

கடலுக்குள் மறைந்த
கடலலையைத் தேடி
கடலை நோக்கி ஓடுவதும்தான்!

உனக்கும் 
எனக்குமான உறவு!

"கவிதையே"!
---------------------------
கவிதையே..!!(63)
-----------------
காந்தத்துண்டையும்
இரும்புத் துகளையும்
இணைக்கும் ஈர்ப்பு விசையைப் போல!

இருவேறுத் துருவங்களான
நம்மிருவரையும் இழுத்துவந்துச் சேர்த்துவைத்து
வேடிக்கைப் பார்க்கிறது 
"கவிதையே"!
------------------------------
கவிதையே..!!(64)
-----------------
உன்னையெழுதுவதால்
என்னைச் சிலருக்குப் பிடிப்பதில்லை!

என்ன செய்ய !?

உன்னை எழுதாவிட்டால்
என்னை எனக்கேப் பிடிப்பதில்லையே!
-----------------------------------------
கவிதையே..!!(65)
------------------
என்னைப் பார்த்து 
நீ யார் .!?என கேட்டார்கள் 
மத்தியில் !

நீயா..!?என
கேட்க வைத்தது!

நீ தான் "கவிதையே"!
--------------------------


4 comments: