Wednesday 5 August 2015

".............".ப் பிறந்தது நானா..!!?

காதலின் பேரைச் சொல்லி
காமத்தில் கலந்திட்ட கருங்காளிகளாலோ!

தேகத்தின் ஆசைக்கு விலைப்பேசி
ஆணுறை வாங்க வக்கில்லாத
பிச்சைக்காரத் தனத்தினாலோ!


சாதி,மத வெறியாட்டத்தில்
கற்பைச் சூறையாடிய கலவரக் காவலிகளாலோ!

ஜனநாயகத்தினை நிலைநிறுத்தவென சொல்லி விட்டு
சிறைப்பட்ட மானினத்தை சின்னாபின்னமாப் படுத்திய
ஏகாதிபத்திய வெறிநாய்களாலோ!

சிந்தப்பட்ட உயிர்த்துளி 
கர்ப்பப்பையை அடைந்ததினால்
குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன்!

தவறுகளை ,அநியாயங்களை
அத்துமீறல்களைத் தடுக்கத் துப்பில்லாத
மனிதச் சமூகம் என்னைச் சொல்கிறது!

".............".ப் பிறந்தது நானென்று!

       

1 comment: