Tuesday 18 August 2015

கவிதையே..!!(71-75)


71)
என் மடிச் சேர்ந்த
மழலை நீ!

உன் தோள் சாய்ந்த
பாலகன் நான்!
--------------------
கவிதையே..!!(72)
------------------
என்னைப் பிடிக்கும் 
என்பவர்களை விட !

என் எழுத்தைப் பிடிக்கும்
என்பவர்களை!

ஏனோ
எனக்கு ரொம்ப பிடித்து விடுகிறது !
----------------------------------
கவிதையே..!!(73)
------------------
நீர்த்துளியாய் என் நெஞ்சூற்றில் 
நீ கசிந்திடுகையில் நான் உணரவில்லை!

நீ என் ஆழ்மனக் கிணற்றை
நிரப்பிட வந்த வெள்ளப்பெருக்கு என்பதனை!
----------------------------
கவிதையே..!!(74)
-------------------
"ச்சும்மா" "ச்சும்மா " என்னிடம் நீ
"ச்சும்மா "னு சொல்லாதே!

"ச்சும்மா "னு நீ சொல்லும் வார்த்தை
"ச்சும்மா "வாவது  என்னை ஒரு கவிதை எழுதிட வைக்கிறது !
-----------------------------
கவிதையே..!!(75)
------------------
காதலை விட
கவிதையே சிறந்தது!

ஆம்
காதல் காயத்தைத் தருகிறது!

கவிதை காயத்திற்கு மருந்திடுகிறது!
-----------------------------------

3 comments:

  1. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. எளிமையாக ஆயினும்
    மனம் ஆழம் தொடும்படியாக...
    மனம் கவர்ந்த கவிதைகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete