Saturday 12 September 2015

கவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்!

அதிகாலை இளங்காற்று முகம் தழுவிச்
செல்லுதலைப் போல்!

குளிக்கத் துவங்குகையில்
உச்சந்தலையில் முதல் துளி விழுதலைப் போல்!

காதல் பேச ஆயிரம் வார்த்தைகளிருந்தும் பேசிட முடியாமல் 
பிரியமானவளின் கைதனை இறுகப் பிடிப்பதைப் போல்!

பச்சிளம் குழந்தை முகத்தில் மீசை குத்திடாமல் முத்தம் பதிப்பதுப் போல்!

சீலாக் கருவாட்டு ஆனத்தில் மொச்சைப் பயறின் ருசியைப் போல்!

தொட்டில் குழந்தை தூக்கத்தில் சிரிப்பதனைப் பார்த்ததுப் போல்!

துள்ளிச் செல்லும் நதி நீரில் 
உள்ளங்கால்களை நனைப்பதுப் போல்!

எத்தனை எத்தனையோ
சுகம்தனை அனுபவிக்கிறேன்!

கவிதைகளை 
வாசிக்கையில்
எழுதுகையில்!

கவிதைகள் வரிகளினூடாக
வாழ்ந்துக்கொண்டும்
லயித்துக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் பயணிக்கிறேன்!

"ஒரு மாதிரியாக" என்னைப் பார்க்கும்
இவ்வுலகத்தினை கண்டு கொள்ளாமல் !

      

5 comments:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
    http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிட்டீங்களா சகோ? அனுப்புகிறேன் என்று சொன்னதால் நினைவூட்டுகிறேன். நன்றி

      Delete
    2. சகோ !
      மன்னிக்கவும் ...
      22 தேதி ஆகி விட்டதே...
      இனி அனுப்பலாமா.!?

      Delete
  3. தொடரட்டும் கவிதைகள்.....

    ReplyDelete