Thursday 17 September 2015

கவிதையே..!!(86-90)

நீ திரும்பிப் பார்க்காத
என் முகத்தை!

இனி
புகைப்படத்திற்குக் கூட 
திரும்பிக் காட்டுவதாக இல்லை!
----------------------------------
கவிதையே..!!(87)
-------------------
உன்னைக் கரம் பிடித்தது
என் வாழ்வினை அர்த்தமாக்கிடத்தான்!

ஆனால் நீயோ
அற்புதமாக்கி விட்டாய்!
----------------------------
கவிதையே..!!(88)
------------------
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தப் பிறகு தான்!

என்னையும் கொஞ்சம்
நேசிக்க ஆரம்பித்தேன்!

"கவிதையே"!
---------------------------
கவிதையே..!! (89)
------------------
உன்னை எழுதிவிட்டு 
அழிக்கிறேன்!

பிறகு
அழித்ததையேத் திரும்ப
எழுதுகிறேன் !

ஆச்சரியக்குறி
கேள்விக்குறியிட்டு 
உன்னை அழகும்படுத்துகிறேன்!

சிறிது நேரத்தில் 
அக்குறிகளை அழித்து தொடர்ப்புள்ளி இடுகிறேன்!

இப்படியாக 
உன்னைக் கொடுமைப்படுத்திடும்
என்னைப் பார்த்து!

எப்படிதான் சிரிக்கிறாயோ !?
ஓர் குழந்தையைப்போல !
----------------------------
கவிதையே..!! (90)
-------------------
நீ எனக்கு
விட்ட கதையா !?
தொட்ட கதையா !? தெரியவில்லை !

ஆனாலும் 
என் வாழ்வின் 
விடுகதை நீ !
------------------------

1 comment: