Sunday 27 September 2015

கவிதையே..!! (96-100)


96)
உன்னை 
தாய்ப்பாலாய்க் குடித்துதான்!

பசியமர்த்திக் கொள்கிறது
என் உணர்வுக் குழந்தை!
----------------------------
கவிதையே..!! (97)
-------------------
உன்னை 
வாசித்தலிலும்,நேசித்தலிலுமே
ஊதுபத்தியாய் கரைந்து மணம் வீசுகிறது !

என் ஓய்வு நேரங்கள்!
--------------------------
கவிதையே..!! (98)
---------------------
உன்னைத் தொடர்ந்து
எழுதும் நான்!

சில நாட்கள் 
உன்னை எழுதாமலும் இருக்கிறேன்!

ஏனென்றால் 
உன்னை எழுதிடச் சொல்லி 
நீ செய்யும் சித்திரவதைகளும்
எனக்குப் பிடித்திருப்பதால்!
---------------------------
கவிதையே..!! (99)
--------------------
என் புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் 
சோகத்தைப் புரிந்தவர்களால் மட்டுமே!

என் கவிதைக்குள்ளிருக்கும்
"கரு"வினை உணர முடியும்!
-------------------------------
கவிதையே..!! (100)
----------------------
என் கண்களைப் 
படிக்கத் தெரிந்த உன்னிடத்தில்!

என் காதலை மறைக்கத் தெரியாமல்
தோற்றுத் தான் போகிறேன் !
--------------------------------

1 comment:

  1. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete